பக்கம்:அகத்திய முனிவர்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 அகத்தியமுனிவர். கடைச்சங்க காலத்தில் ஒருமுறை அருளுருக் கொண்டுவந்த பரமன் உமாதேவியாரைநோக்கி, “கீரன் இலக்கண இலக்கியங்களைக் கலக்கமறக் கற்றவ யிைனும் பழுதற்ற புலமைத் தெளிவு இன்னும் நன்கமைய வில்லை; அது நன்றமைந்து வர அவனே எங்கு அனுப்ப லாம்?’ என வினேதமாக வினவினர். அப்பொழுது உமை யம்மையார் இவரிடமே அனுப்பியருளும்படி இனிது மொழிந்தார். அங்கனம் மொழியுங்கால் எதல்ை இங்ங். னம் குறுமுனியைக் குறித்தாய்? என்று இறைவர் குறு நகை செய்தார். தாங்கள் முன்பு குறித்ததிலிருந்துதான் இன்று யான் குறித்கேன் எனத் தேவியார் கூறினர். யான் குறித்தது என்ன? என்று அம் முன்னவர் நோக்க அவ்வமையம் அம்மையுாைக்கபடியை அடியில் பார்க்க. பைத்தலை புரட்டு முந்நீர்ப் பெளவமுண்டவனே எம்மை ஒத்தவன்; அனையான் வாழ்க்கைக்கு உரியளாகிய உலோபா முத்திசை இமவான் பெற்றமுகிழ் முலைக்கொடி ஒப்பாள் என்று அத்திருமுனியை நோக்கி ஆயிடை விடுத்தாய் அன்றே” இங்ஙனம் பண்டுமொழிந்தபடியைக் கொண்டு கூறிய தைக் கேட்டு அவ்வள்ளல் உள்ளுவந்து கீாரை இவரிடம் உய்த்தார். அவர் வந்து வணங்கி இவர் மருங்கமர்த்திருந்து அருங்கலைகளை ஒருங்குணர்ந்து சென்ருர். அதன்பின் :இனவஅகுறுமுனி இலக்கணம் பெறப் புனைதரும் இலக்கி யப் புலவர் சிங்கம்' என அவர் நிலவி நின் ருர், அறுமுகப் பெருமானிடம் இவர் அருளுபதேசம் பெற்றிருந்தாாாதலால் தமிழ்ப்புலமைக்கு இவர் தலைமை எய்தி அறிவுநிலையம் என நிலவி கின்ருர்.