பக்கம்:அகத்திய முனிவர்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமை 83 நிந்தை புரிந்து நிமிர்ந்து நின்றான். கீரர் சினந்து "எங்கே! உன் ஆரிய மந்திரத்தைச் சொல்லி என் தலையிலிருக்கும் ஓர் மயிரைக் கீழே வீழ்த்து பார்க்கலாம்! என்றார். அவன் யாதும் ஆற்றாது விழித்து நின்றான். பின்பு நினைந்து நோக்கி "உமது தமிழ்ச் சொல்லின் வல்லமையால் ஏதே னும் ஒன்று செய்துகாட்டும்" என்று அவன் செருக்கி நின் றான். அவர், "முரணில் பொதியில் முதற்புத்தேள்' என நம் முனிவர் பெருமானை முன்னுறத் துதித்து ஆணை கூ கூறி வசைகவி ஒன்றை அவன்மேல் இ சத்தார். உடனே அவன் துள்ளி விழுந்தான்; துடித்துயிர் துறந்தான். பின்பு அவர் உள்ளம் இரங்கி இவ் வள்ளலை நினைந்து அவன் உயிர்த்தெழும்படி வேண்டி மீண்டும் ஒரு கவி விரைந்து பாடினார். சை "ஆரியம் நன்று; தமிழ்தீது என உரைத்த காரியத்தால் காலக்கோட்பட்டானைச் சீரிய அந்தண் பொதியில் அகத்தியனார் ஆணையால் செந்தமிழே தீர்க்கசுவா கா'” - என்று இதனை இனிது மொழிந்தார். மொழியவே முன் விழுந்து மடிந்த கொண்டான் எழுந்து நிமிர்ந்து நின் றான். பின்பு உணர்ந்தடங்கி உளந்திருந்திச் சென்றான். "நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம்" (தொல்காப்பியம்) என்றபடி அன்று அவர், இவர் மேல் ஆணையிட்டு மொழிந்த வண்ணமே நிகழ்ந்தமையை யறிந்து அனைவரும் வியந்தார். யாரையும் மதியாத கீரர் இவரை ஆர்வமுடன் ன் போற்றிவந்த அருமையும். வரது பெருமையும் இதனால் இனிது அறியலாகும்.