பக்கம்:அகத்திய முனிவர்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

88 தார். அகத்தியமுனிவர். களி அமரகணங்கள் யாவரும் அக்காட்சியைக் காணவந்து கூர்ந்திருந்தனர். இந்திரன் வலப்புறத்தே இம் முனிவர் பெருந்தகை மாட்சியோடு இனிது வீற்றிருந்தார். அலள் சதிமிதித்து முதன்முறை இனிய இசையோடு அழகொழுக வெளி வந்தாள். அவ்வமயம் அங்கிருந்த இந்திர குமார னாகிய சயந்தன் காதல்மீக் கூர்ந்து அவளைக் கனிந்து நோக் கினான்.'கண்ணின்மேற் கலந்தாளோ? கருத்தின்மேற் புகுந்தாளோ? பண்ணின்மேல் வரிச்சுரும்போ? தும்பியோ? படர் மயிலோ?" என்று அவன் இடருழந்தான். அவளும் அவன்மீது தன் கண்ணைச் செலுத்தினாள். இங்ஙனம் கள்ள விழி போராட அவள் உள்ளநிலை மாறினாள்; மாறினும் தான் உற்ற நடனத்தை ஊக்கி வந்தாள். வரினும் அதில் நுண்ணிதாய் நேர்ந்து வரும் வழுவினை நாரதர் நுனித்தறிந் கலகப்பிரியராதலால் அப்பிழை நிலையை இவர் காணவேண்டுமென்று கருதித் தனது யாழில் மாறுபட ஓர் நரம்பினைப் பனித்துக் காட்டினார். முன்னதாகவே அவ் வுண்மையை நன்கறிந்திருந்தும் தண்ணளியுடையராதலால் புன்னகைசெய்து பொறுத்துவந்த இவர் அவர் செய்ததைக் கண்டவுடனே கடுத்து அச் சயந்தனை மூங்கிலாகவும், அவ ளைக் கணிகையாகவும், அவ் வீணையை மாணிழந்த மனை யாகவும், மண்ணில் போய்த் தங்கும்படி சபித்தார். இவர் சினந்தவுடனே நாரதரே நடுங்கினார் என்றால் வேறு கூறுவ தென்? இந்திரன் அஞ்சி யெழுந்து காமக்களிப்பால் நேர்ந்த இப்பிழையினைப் பொறுத்தருளி இட்ட சாபத்திற்கோர் முடிவினை அடிகள் ஆற்றியருளவேண்டுமென்று போற்றி வேண்டினான். அவ்வாறே கருணைசெய்து ஒருகாலவரை யறையை அருள்புரிந்துவிட்டு இவர் அகன்று போயினார்.