பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/154

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

களிற்றியானை நிரை

௧௫௧


நன்கலந் தரூஉம் வயவர் பெருமகன்
சுடர்மணிப் பெரும்பூண் ஆஅய் கானத்துத்
தலைநாள் அலரி நாறுநின்

உ0) அலர்முலை ஆகத் தின்றுயில் மறந்தே.

- உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்.


(சொ - ள்.) க௩. வாழி தோழி - ,

க-௪. நீ - , ஆய் நலம் தொலைந்த மேனியும் - ஆராயும் அழகு தொலைந்த மேனியினையும், மாமலர்த் தகைவனப்பு இழந்த கண்ணும் - கரிய மலரின் சிறந்த அழகினை இழந்த கண்ணினையும், வகை இல வண்ணம் வாடிய வரியும் - முன்னை யியல்பு இலவாய் அழகு வாடின திதலையையும், நோக்கி ஆழல் ஆன்றிசின் - நோக்கித் துயரில் அமுந் தாதேகொள்:

௪-௬. உரிதினில் ஈதல் இன்பம் வெஃகி - (நம் காதலர்) ஈதலால் எய்தும் இன்பம் தமக்கு உரிமையாக விரும்பி, மேவர - அது வந்துற, செய்பொருள் திறவராகி - செய்யும் பொருள் வகையராகி,

௬-௯. புல் இலை பரு அரை நெல்லி அம்புளித் திரள்காய் - சிறிய இலையினையும் பரிய அடியினையும் உடைய நெல்லியின் இனிய புளிப்பினையுடைய திரண்ட காயினை, கானம் மடமரைக் கண நிரை கவரும் - கானத்தே யுள்ள இளைய மரைமானின் மிக்க கூட்டம் தின்னும், வேனில் அத்தம் என்னாது - வெம்மை மிக்க நெறி என்று நினையாது, ஏமுற்று - மயக்கமுற்று,

க0-௨. விண்பொரு நெடுவரை இயல்தேர் மோரியர் - விண்ணை அளாவும் நீண்டுயர்ந்த பெருமலைகளில் செல்லும் தேரினையுடைய மோரியர், பொன்புனை திகிரி திரிதர - தங்கள் பொன்னாலியன்ற உருள் (தடையின்றிச்) செல்ல, குறைத்த அறை இறந்து அகன்றனராயினும் - வெட்டி நெறியாக்கிக் கொண்ட குன்றங்களைக் கடந்து சென்றாராயினும்,

க௩-௨௦. ஆடு இயல் மடமயில் ஒழித்த பீலி வார்ந்து - ஆடும் இயல் வாய்ந்த இளைய மயில் நீக்கிய தோகையை உரித்து, தம் சிலை மாண் வல் வில் சுற்றி - தமது ஓசை மிக்க வலிய வில்லில் சுற்றி, பல மாண் அம்புடைக் கையர் - பலவாகிய மாட்சியுற்ற அம்புடைய கையினராய், அரண் பல நூறி - பகைவர் அரண்கள் பலவற்றை அழித்து, நன் கலம் தரூஉம் - நல்ல அணிகலன்களைக் கொணரும், வயவர் பெருமகன் சுடர்மணிப் பெரும்பூண் ஆஅய் கானத்து - வீரர்களது பெருமானாகிய சுடரும் மணிகள் பதித்த பெரும் பூணினை அணிந்த ஆய் என்பானது காட்டில், தலை நாள் அலரி நாறும் - அன்றலர்ந்த மலரென மணக்கும், நின் அலர் முலை ஆகத்து இன் துயில் மறந்து - நினது பரந்த முலையினையுடைய மார்பின்கண்ணே துயிலும் இனிய துயிலினை மறந்து,

கஉ-௩. எனையதும் நீடலர் - சிறிதும் தாழ்த்திரார்.