பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/220

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

களிற்றியானை நிரை

௨௧௭



இன்றெவன் கொல்லோ கண்டிகு மற்றவன்
நல்கா மையின் அம்ப லாகி
ஒருங்குவந் துவக்கும் பண்பின்
இருஞ்சூழ் ஓதி ஒண்ணுதல் பசப்பே.


- 1மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங்கூத்தன்.

(சொ - ள்.) கரு. தோழி -,

க-௯. உளைமான் துப்பின் - சிங்கம் போலும் வலியினனாய், தினைப் பெரும் புனத்து ஓங்கு கழுதில் - பெரிய தினைப்புனத்தில் ஓங்கிய பரணின் கண்ணே , கானவன் பிழி மகிழ்ந்து வதிந்தென - கானவன் கள்ளுண்டு களித்து இருந்தனனாக, உரைத்த சந்தின் ஊரல் இரும் கதுப்பு - பூசிய மயிர்ச் சாந்தினையுடைய பரந்த கரிய கூந்தலை, ஐதுவரல் அசைவளி ஆற்ற - மெல்லென அசைந்து வரும் காற்றுப் புகுந்து புலர்த்த, ஒலியல் வார் மயிர் கை பெயரா உளரினள் - தழைத்து நீண்ட அக் கூந்தலைத் தன் கையாற் பெயர்த்துக் கோதிக் கொண்டு, கொடிச்சி - அவன் மனைவி, பெருவரை மருங்கில் - அப் பெரிய வரையின் பக்கத்தே, குறிஞ்சி பாட - குறிஞ்சிப் பண்ணைப் பாடா நிற்க, குரலும் கொள்ளாது - தான் கொண்ட தினைக் கதிரினையும் உட்கொள்ளாது, நிலையினும் பெயராது - நின்ற நிலையினின்றும் அகலாது, படாஅப் பைங்கண் பாடுபெற்று - துயில் வரப்பெறாத அழகிய கண் துயில்வரப் பெற்று, மறம் புகல் மழ களிறு ஒய்யென உறங்கும் நாடன் - வீரத்தினை விரும்பிய இளைய களிறு விரைந்து தூங்கும் நாட்டை யுடையனாகிய நம் தலைவன்,

க0-ரு. ஆரம் மார்பின் அரி ஞிமிறு ஆர்ப்ப - சந்தனம் பூசிய தனது மார்பின் கண்ணே அழகிய வண்டுகள் ஒலிப்ப, தாரன் கண்ணியன் எஃகு உடை வலத்தன் - தாரனும் கண்ணியனும் வேல் பொருந்திய வலக்கையை யுடையவனுமாகி, காவலர் அறிதல் ஓம்பி- காவலாளர் அறிதலைப் பரிகரித்து, பையென வீழாக் கதவம் அசையினன் புகுதந்து - தாழ் வீழ்த்தாத கதவினருகே தங்கி மெல்லெனப் புகுந்து, உயங்கு படர் அகல முயங்கித் தோள் மணந்து - வருந்தும் துன்பம் நீங்க அணைத்துத் தோளினைக் கூடி, இன்சொல் அளைஇப் பெயர்ந்தனன் - இன் சொற்களைக் கலந்து பேசிச் சென்றனன் ; (அங்ஙனமாகவும் இப்பால்,)

க௬-௯. இன்று அவன் நல்காமையின் - அவன் இன்று ஒரு நாள் வந்து அருள் செய்யாமையின், ஒருங்கு வந்து அம்பல் ஆகி - ஒருங்கே வந்து அலர் ஆகுமாறு, உவக்கும் பண்பின் - மகிழ்ச்சியை விளைவிக்கும் இயல்பினை யுடைய, இருஞ் சூழ் ஓதி ஒண் நுதல் பசப்பு - கரிய கூந்தலாற் சூழப்பட்ட ஒள்ளிய நெற்றியின் பசப்பினை, எவன் கொல்லோ கண்டிகும் - நாம் கண்டது என்னையோ.

(முடிபு) தோழி! கானவன் பிழி மகிழ்ந்து வதிந்தென, கொடிச்சி குறிஞ்சி பாட, களிறு கண்பாடு பெற்று உறங்கும் நாடன், முயங்கித் தோள் மணந்து இன்


(பாடம்) 1. மதுரைப் பாலாசிரியன்.