பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧௦களிற்றியானை நிரை[பாட்டு

 

(மே - ள்.) 1‘அறக்கழிவுடையன’ என்னும் சூத்திரத்து, இச் செய்யுளுள் ‘பாம்பு மதன். . . இகுளை’ என்ற பகுதியைக் காட்டி, இதனுள், தலைவி செல்வாமென்றது, சிறைப்புறமாக வரைவு கடாயது பொருட்பயன் தருதலின், அறக்கழிவுடையதேனும் அமைந்தது என்றனர் நச். 2‘மாட்டும் எச்சமும்’ என்னுஞ் சூத்திரத்து உரையில், இச் செய்யுளுள் முதலுங் கருவும் முறை பிறழ வாராமையின், இதனைத் துறை வகையின்றி வந்தது என்பர், பேரா.


 
9. பாலை
 

[வினைமுற்றி மீண்ட தலைமகன் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது.]


கொல்வினைப் பொலிந்த கூர்ங்3குறும் புழுகின்
வில்லோர் தூணி வீங்கப் பெய்த
அப்புநுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பைச்
செப்படர் அன்ன செங்குழை அகந்தோ

௫)றிழுதின் அன்ன தீம்புழல் துய்வாய்
உழுதுகாண் துளைய வாகி ஆர்கழல்
பாலி வானிற் காலொடு பற்றி
துப்பின் அன்ன செங்கோட் டியவின்
நெய்த்தோர் மீமிசை நிணத்திற் பரிக்கும்

௧௦) அத்த நண்ணிய அங்குடிச் சீறூர்க்
கொடுநுண் ஓதி மகளிர் ஓக்கிய
தொடிமாண் உலக்கைத் தூண்டுரற் பாணி
நெடுமால் வரைய குடிஞையோ டிரட்டுங்
குன்றுபின் ஒழியப் போகி உரந்துரந்து

௧௫)ஞாயிறு படினும் ஊர்சேய்த் தெனாது
துனைபரி துரக்கும் துஞ்சாச் செலவின்
எம்மினும் விரைந்துவல் லெய்திப் பன்மாண்
ஓங்கிய நல்லில் ஒருசிறை நிலைஇப்
பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவிக்

௨௦)கன்றுபுகு மாலை நின்றோள் எய்திக்
கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகிப்
பிடிக்கை அன்ன பின்னகந் தீண்டித்
தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ
நாணொடு மிடைந்த கற்பின் வாள்நுதல்

௨௫)அந்தீங் கிளவிக் குறுமகள்
4மென்றோள் பெறநசைஇச் சென்றஎன் நெஞ்சே.

-கல்லாடனார்.
 

 

1. தொல். பொருள். ௨௪. 2. தொல். செய். ௨௧௧. (பாடம்) 3. குறும்பெ ்கின். 4. மென்றோ ணசைஇ.