பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

களிற்றியானை நிரை

௮௩



ரு) தரில்படு வள்ளை ஆய்கொடி மயக்கித்
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது .
கயிறிடு கதச்சேப் போல மதமிக்கு
நாட்கயம் உழக்கும் பூக்கே மூர
வருபுனல் வையை வார்மணல் அகன்துறைத்

க0) திருமரு தோங்கிய விரிமலர்க் காவின்
நறும்பல் கூந்தற் குறுந்தொடி மடந்தையொடு
வதுவை அயர்ந்தனை யென்ப அலரே
கொய்சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழியன்
ஆலங் கானத் தகன்றலை சிவப்பச்

௧௫) சேரல் செம்பியன் சினங்கெழு திதியன்
போர்வல் யானைப் பொலம்பூண் எழினி
நாரரி நறவின் எருமை யூரன்
தேங்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்
இருங்கோ வேண்மான் இயல்தேர்ப் பொருநனென்

உ௦) றெழுவர் நல்வலம் அடங்க ஒருபகல்
முரசொடு வெண்குடை அகப்படுத் துரைசெலக்
கொன்றுகளம் வேட்ட ஞான்றை
வென்றிகொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே.

- மதுரை நக்கீரர்.

(சொ - ள்.) க-அ. பகுவாய் - பிளந்த வாயினையும், பல்வரி - பல வரிகளையுமுடைய, வரா அல் இரும்போத்து - பெரிய வராற் போத்து, கொடுவாய் இரும்பின் கோள் இரை துற்றி - வளைந்த வாயினையுடைய தூண்டிலிலுள்ள தனக்குக் கூற்றமாகிய இரையினை விழுங்கி, ஆம்பல் மெல்லடை கிழிய எழுந்து - ஆம்பலது மெல்லிய இலை கிழிய மேலெழுந்தும், குவளைக் கூம்புவிடு பன்மலர் சிதையப் பாய்ந்து - குவளையின் அரும்பு மலர்ந்த பல மலர்களும் சிதையும்படி பக்கத்தே பாய்ந்தும், அரில் படு வள்ளை ஆய்கொடி மயக்கி - பிணக்கம் மேவிய அழகிய வள்ளைக் கொடியினைக் கலக்கியும், தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது- தூண்டிலிட்ட வேட்டுவன் இழுக்கவும் வாராமல், கயிறு இடு கதச் சேப் போல - கயிறிட்டுப் பிடிக்கும் சினம் மிக்க ஏறு போல, மதம் மிக்கு நாட்கயம் உழக்கும் பூக்கேழ் ஊர - செருக்குமிக்கு விடியற்காலத்தே குளங்களைக் கலக்கும் பூக்கள் பொருந்திய ஊரனே!

௯-உ௩. புனல் வரு வையை வார் மணல் அகன் துறை - என்றும் நீர் வற்றாது வரும் வையையின் மிக்க மணல் பொருந்திய அகன்ற துறையைச் சார்ந்த, திருமருது ஓங்கிய விரிமலர்க் காவின் - அழகிய மருதமரம் ஓங்கிய விரிந்த மலர்களையுடைய சோலையில், நறும்பல் கூந்தல் குறுந்தொடி மடந்தையொடு - நன்மணமுடைய மிக்க கூந் தலையும் குறிய வளையல்களையும் உடைய பரத்தையை, வதுவை அயர்ந்தனை என்ப - மணஞ் செய்து கொண்டனை யென்று ஊரார் கூறுவர்; அலர்- அவ்வலர், கொய்சுவல் புரவிக் கொடித் தேர்ச் செழி