பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 165


86. அகமலி உவகையள்!

பாடியவர்: நல்லாவூர் கிழார்.திணை:மருதம் துறை: வாயில் மறுத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியது. தலைமகளைக் கூடி இன்புற்றிருந்த தலைமகன், பண்டு நிகழ்ந்தது. சொல்லி’ இன்புற்றிருந்ததுமாம். சிறப்பு: தமிழரின் பண்டைய திருமண நிகழ்ச்சிகளை முறையாகக் கூறுவது.

(திருமண நாளும் அன்றிரவு நடைபெறும் முதலிரவின் அனுபவமும் எவராலுமே என்றுமே மறக்க முடியாத அளப்பருஞ் சுவையுடையனவாகும். அந்தச் சுவையான நிகழ்ச்சிகளைத் தன் மனைவியோடு பின்னொரு நாளிற் சொல்லி மகிழுகிறான் தலைவன். அவள் அத்தகையள்; நீதான் மறுத்தனை எனத் தோழியிடம் கூறியதாகவும் கொள்க.)

உழுந்துதலைப் பெய்த கொழுங்கனி மிதவை
பெருஞ்சோற்று அமலை நிற்ப, நிரைகால்
தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரி,
மனைவிளக் குறுத்து, மாலை தொடரிக்,

கனைஇருள் அகன்ற கவின்பெறு காலைக்,
5


கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்
கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென,
உச்சிக் குடத்தர், புத்தகன் மண்டையர்,
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்

முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப்,
10


புதல்வற் பயந்த திதலை!அவ் வயிற்று
வால்இழை மகளிர் நால்வர் கூடிக்,
'கற்பினின் வழாஅ, நற்பல உதவிப்
பெற்றோற் பெட்கும் துணையை ஆக-என

நீரோடு சொரிந்த ஈர்இதழ் அலரி
15


பல்இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன்மணம் கழிந்த பின்றைக்,
கல்லென சும்மையர், ஞெரேரெனப் புகுதந்து,
'பேர்இற் கிழத்தி ஆக'எனத் தமர்தர;

ஓர்இற் கூடிய உடன்புணர் கங்குல்,
20


கொடும்புறம் வளைஇக், கோடிக் கலிங்கத்து
ஒடுங்கினள் கிடந்த ஓர்புறம் தழீஇ,
முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப,
அஞ்சினள் உயிர்த்த காலை, யாழநின்

நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை'என,
25