பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

356

அகநானூறு - மணிமிடை பவளம்


என்று, பகற்குறிக்கண் தோழி செறிப்பறிவுறீஇ வரைவு கடாயினாள் என்க.

சொற்பொருள்: 2. அம் பகட்டு - மார்பு அழகிய விளக்கத்தினையுடைய மார்பு. 3. படுசினை - மிகுந்த கிளைகள். 4. முருகு - அழகு முருகனும் ஆம் எரிதின்கொல்லை எரியுண்ட கொல்லை. இறைஞ்சிய ஏனல் - கதிர் முற்றித் தலை தாழ்ந்து வளைந்திருக்கும் தினைப்புனம். 8. எண்மை - எளிமை. 9. கொடியோர் ஆறலைகள்வர்; கொடிய தன்மை உடையவர் ஆகலின் கொடியோர் எனப்பட்டனர் 11. படாஅர் - தூறு. 12. கயந்தலை - மென்தலை 15. மகளிர் - தேவ மகளிர்; சூரர மகளிர் என்றும் கொள்வர். 17. காப்பு காவல் உள்ள இடம் இல்லம்.

விளக்கம்: தலைவியின் குடும்பத்தின் தகுதி கூறி. நீ அவளை அடைதல் எளிதென எண்ணாதே எனக் கூறுவதன் மூலமும், இல்லம் காப்புடையது எனக் கூறுவதன் மூலமும் இரவுக்குறி மறுத்து, இச்செறிப்பும் அறிவுறுத்தித் தோழி வரைவு கடாயினாள் என்க.

பாடபேதங்கள்: 6 எவ்வம் கூறிய.16. கொங்கோடு. உதிர்த்த: கொங்கு - பூந்தாது.

289. முத்துச் சொரியும் கண்கள்!

பாடியவர்: எயினந்தை மகன் இளங்கீரனார் திணை: பாலை துறை: பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

(தன்னுடைய உயிர்த் துணைவியைப் பிரிந்து தன் வினை மேற் செல்லுதலுற்ற தலைமகன் ஒருவன், இடை வழியிலே, அவளைப் பிரிந்த பெருவருத்தம் நெஞ்சிலே சூழ்ந்து வருத்தத்தன் நெஞ்சிற்கு இவ்வாறு கூறுகின்றான்;) -

         சிலைஏ றட்ட கணைவீழ் வம்பலர்
         உயர்பதுக்கு இவர்ந்த ததர்கொடி அதிரல்
         நெடுநிலை நடுகல் நாட்பலிக் கூட்டும்
         சுரனிடை விலங்கிய மரன்ஓங்கு இயவின்,
         வந்து, வினை வலித்த நம்வயின், என்றும் 5

         தெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாது,
         நெகிழா மென்பிணி வீங்கிய கைசிறிது
         அவிழினும், உயவும் ஆய்மடத் தகுவி,
         சேண்உறை புலம்பின் நாள்முறை இழைத்த
         திண்சுவர் நோக்கி, நினைந்து கண்பனி, 1O