பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 27



இதணை இலை அருகு நெறித்தன்ன வண்டுபடுபு இருளிய கூந்தற் கோதை இவளினும், நமக்கு ஈதல் சிறந்தன்று என் நெஞ்சே, கானம் நம்மொடு வருக என்னுதியாயின், வாரேன்; நின் வினை வாய்க்க என்று கூட்டிப் பொருள் காண்க.

மேற்கோள்: 'ஆபெயர்த்துத் தருதலும் என்னும் ‘வெறியறி சிறப்பின் என்னும் புறத்திணையியற் சூத்திரப் பகுதிக்கு, இப் பாட்டின்ை உதாரணமாகக் காட்டி, இதனுள் மறவர் நாளாவுய்த்த' என, வேந்துறு தொழிலல்லாத வெட்சித்திணையும், கரந்தைக்கண்ணே கொள்க என்றும்;

‘பெயரும் பீடும் எழுதி அதர்தொறும் பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்' என, அகத்திற்கும் வருதலின், பொது வியலாயிற்று என்றும்;

‘நோயும் இன்பமும்’ என்னும் பொருளியற் சூத்திரத்து வருகவென்னுதி யாயின், வாரேன், நெஞ்சம்! வாய்க்க நின் வினையே! என்பது, மறுத்துரைப்பது போலத் தறுகண்மை பற்றிப் பெருமிதங் கூறிற்று என்னும் நச்சினார்க்கினியர் கூறுவர்.

பாடபேதங்கள்: 1 mகைப். 6. வீவாய் அம்பின். 12. படுக்கும். 15. வோர நெஞ்சம்.

132. நின்னுடன் கொண்டு போய்விடுக!

பாடியவர்: தாயங் கண்ணனார். திணை: குறிஞ்சி. துறை: தோழி தலைமகளை இடத்து உய்த்துவந்து தலைமகனை எதிர்ப்பட்டு நின்று வரைவுகடாயது.

(குறித்த இடத்திலே தலைமகளைக் கொண்டு சேர்த்து விட்டுத், தலைமகன் அவளை விரைந்து மணந்துகொள்ள வேண்டியதை வற்புறுத்துகிறாள் தோழி)

        ஏனலும் இறங்குகுரல் இறுத்தன; நோய்மலிந்து
        ஆய்கவின் தொலைந்த இவள் நுதலும்; நோக்கி
        ஏதில மொழியும் இவ்வூரும்; ஆகலின்,
        களிற்றுமுகந் திறந்த கவுளுடைப் பகழி,
        வால்நிணப் புகவின், கானவர் தங்கை 5

        அம்பணை மென்தோள் ஆயஇதழ் மழைக்கண்
        ஒல்கியற் கொடிச்சியை நல்கினை ஆயின்,
        கொண்டனை சென்மோ நுண்பூண் மார்ப!
        தளிதலைத் தலைஇய சாரல் நளிசுனைக்
        கூம்புமுகை அவிழ்த்த குறுஞ்சிறைப் பறவை 10