மூலமும் உரையும்
புலியூர்க்கேசிகன் * 29
அவிழ்த்த தலைமகன், அவள் நுகர்ந்து பாங்கற் கூட்டமும் பின்னர்த் தோழியிற் கூட்டமும் பெற்றுப், பின்னரும் இரவுக்குறி பகற்குறிகளால் அடைதற்கரிய கூட்டம் பெறச் சிந்தியா நின்றான்; அவ்வெண்ணத்தை விட்டு வரைவொடுபுகுக எனத் தலை மகளைத் தோழி வரைவுகடாயினாள் என்று கொள்க.
மேற்கோள்: 'ஆயர் வேட்டுவர்' என்னும் பொருளியற் சூத்திரவுரையில், 'ஆயர் வேட்டுவர் என்னும் இருபெயரான் அன்றி ஒன்றென முடித்தலாற் கொள்ளப்படும் தலைவரும் தலைவியரும் உளர் என்று உரைத்து, ‘வாணிணப் புகவிற் கானவர் தங்கை’ என வருவனவும் காண்க என்பர் நச்சினார்க்கினியர்.
பாடபேதங்கள்: 6 ஆயிழை மழைக்கண் 9. துளிதலைக் கலைஇய 1. விரியினர் உதிரக் காந்தள்.
133. ஒன்று வினவினர்!
பாடியவர்: உறையூர் மருத்துவன் தாமோதரனார். திணை: பாலை. துறை: ‘பிரிவிடை, ஆற்றாளாயினாள் எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் ஆற்றுவல் என்பதுபடச் சொல்லியது. சிறப்பு: மிளைநாடு பற்றிய செய்தி.
(தலைவன் பிரிந்த காலத்திலே தலைவியின் வாட்டத்தைக் கண்டு, ‘இவள் எப்படிப் பொறுப்பாளோ? என்று கலங்கினாள் தோழி. அவளுக்குத் தன் தலைவனின் காதல் மிகுதியைக் கூறித், ‘தான் ஆற்றியிருப்பேன்’ என்பது தோன்றச் சொல்லுகிறாள் தலைவி) -
'குன்றி அன்ன கண்ண, குருஉமயிர்ப்,
புன்தாள், வெள்ளெலி மோவாய் ஏற்றை
செம்பரல் முரம்பில் சிதர்ந்தபூழி,
நல்நாள் வேங்கைவி நன்களம் வரிப்பக்,
கார்தலை மணந்த பைம்புதற் புறவின்,
5
வில்எறி பஞ்சியின் வெண்மழை தவழும்
கொல்லை. இதைய குறும்பொறை மருங்கில்,
கரிபரந் தன்ன காயாஞ் செம்மலொடு
எரிபரந் தன்ன இலமலர் விரைஇப்,
பூங்கலுழ் சுமந்த தீம்புனற் கான்யாற்று
10
வான்கொள் தூவல் வளிதர உண்கும்;
எம்மொடு வருதல் வல்லையோ மற்று? எனக்
கொன்ஒன்று வினவினர் மன்னே - தோழி!