பக்கம்:அகமும் புறமும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகம் – அகத்தின் அடிப்படை • 27


(காமம், காமம் என்று உலகினர் குறிப்பிடும் அது வருத்தமோ, நோயோ அன்று. மேட்டு நிலத்தில் தழைத்த முதிராத இளைய புல்லை முதிய பசு நாவால் தடவி இன்புறுவது போல நினைக்கும் காலத்து புதிய இன்பத்தைத் தருவதாகும்)

என்று கூறுகின்றான்.

இவ்விரு பாடல்களில் முதல் இரு அடிகள் ஒத்தனவே. இவ்வாறு கூறுகின்றதனால் ஒரு கருத்தைப் பெற வைக்கின்றான்

தொல்காப்பியம் தொடங்கி இக்காலம் வரை அகத்துறை பற்றிப் பெரிய இலக்கியங்களும், பல்வேறு பாடல்களும் தோன்றியிருப்பினும் பலரும் அதனை நன்கு புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. அதனால்தான் போலும் ‘காமநோய்’ என்றும் கூட அக்காலத்திலேயே கூறினர்.

இப்படித் தவறாக நினைக்கக் கூடாது என்று கருதியே போலும் புலவர் இரு பாடல்களிலும் காமம் என்பது நம்மை வருத்தும் அணங்கோ பிணியோ அன்று எனக் கூறுகின்றான்.

முதற்பாடலில் யானை, குளகு என்று உவமையைக் காட்டி உரியவர்களை உரிய காலத்தில் கண்டால் (காணு நர்ப் பெறினே) இம் மனநிலை தோன்றும் என்கிறான்.

இரண்டாம் பாடலில் இன்னும் செறிவாக ஒரு கருத்தைப் பெற வைக்கின்றான். பின் மூன்றடிகளில் இளம்புல், மூதா, விருந்து என்ற மூன்று காணப்படு கின்றன.

மூதா கூறினமையின் அந்தப் புல்லைப் பற்றிக் கறித்து மென்று தின்னும் நிலை மறுக்கப்படுகின்றது.

3