பக்கம்:அகமும் புறமும்.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

368 • அகமும் புறமும்

கொல்லவே வந்தால் அப்பொழுது யாது செய்ய வேண்டும்?’ என்பாரை நோக்கி, இறத்தல் என்பது புதுமையன்றோ? ஏன் மனம் வெறுக்க வேண்டும்? என்கிறார். ‘வாழ்வு இனிமையுடையது, சாவு துன்பந்தருவது.’ என்று நினைத்தால்தானே கொல்லவரும் பிறர் மேல் வெறுப்புக் கொள்ள நேரிடும்? ஆதலால், அவற்றையும் மறுத்து விடுகிறார். இவ்வாறு பல வழியிலும் காரணங்காட்டி ஒருவர் மேல் வெறுப்போ பகையோ கொள்வது தவறு என்று எடுத்துக்காட்டி விட்டார்.

நீரில் அகப்பட்ட கட்டை

இனி வேறு ஒரு வகையிலும் வெறுப்புத் தோன்றக் கூடும். நாம் பிறருக்குச் செய்யும் நன்மைகளை அவர்கள் உணர்ந்து கொள்ளாதவிடத்தும், நாம் செய்யும் உபகாரத்திற்கு நன்றி பாராட்டாதவிடத்தும் வெறுப்புத் தோன்றுதல் இயற்கை இதோ புலவர் அதனையும் மறுக்கிறார். ‘வானம் இடியுடன் மழை பெய்கிறது. அதனால், ஆற்றில் வெள்ளம் பெருகுகிறது. அந்த வெள்ளத்தில் ஒரு கட்டை அகப்பட்டு விடுமாயின், யாது செய்யும்? வெள்ளம் போகும் வழி கட்டையும் செல்லுமன்றோ? அதேபோல, ஒவ்வொருவனுடைய ஆன்மாவும் அதனுடைய ஊழின்வழி நடைபெறுகிறதாதலின் நன்மை செய்யும் ஒருவனைப் புகழவும் வேண்டா. அவன் அற்பனாய் இருக்கும் பொழுது வாய் தவறியும் இகழவும் வேண்டா,’ என்கிறார் புலவர். ஒருவனைப் புகழ்வதாலும் மற்றவனை இகழ்வதாலுந்தானே உலகில் வேறுபாட்டுணர்ச்சியும், வெறுப்பும் தோன்றுகின்றன? எனவே, அடிப்படையில் அவ்வாறு கூறவே வேண்டா என்கிறார் கவிஞர், ‘தப்பித் தவறிப் பெரியோரைப் புகழ்ந்துவிட்டாலும் தவறு இல்லை; சிறியவர்களை வாய் தவறியும் இகழ்ந்துவிட வேண்டா,’ என்று கூற வந்தவர் ‘சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே,’