பக்கம்:அகமும் புறமும்.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட உண்மைகள் • 371


கொடிநிலை, கந்தழி என்ற சூத்திரத்தில் பற்றுக் கோடில்லாத பரம்பொருளைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.

அத்தகைய இடங்களில் ‘கடவுள்’ என்ற சொல்லை வேண்டுமென்றே பெய்கின்றார்.


ஆல் அமர் கடவுள்
கடவுள் ஆலம் (புறநானூறு)

கடவுள் காந்தள்
அருந்திறல் கடவுள் (அகநானூறு)

மலை உறை கடவுள்
குன்றக் குறவன் கடவுள் பேணி (ஐங்குறு நூறு)

கடவுள் கல்சுனை
கடவுள் ஓங்கு வரை (நற்றிணை)

நிலை உயர் கடவுள்
நீ பூப்பலி இட்ட கடவுள் (கலித்தொகை)

உருகெழு மரபின் கடவுள்
கடவுள் அஞ்சி (பதிற்றுப் பத்து)

கடவுள் கற்பின்
பேஎம் முதிர் கடவுள் (குறுந்தொகை)

இவ்வாறு அமைவன எண்ணிறந்தன.

மேலும் திருக்கோயில் கட்டி வழிபடும் வழக்கமும் ஏதோ பல்லவர் காலத்தில்தான் தமிழகத்தில் இருந்தது என்ற தவறான கருத்து இக்கால ஆராய்ச்சியாளரிடை தோன்றியுள்ளது.

ஆனால் இத்திருக்கோயில்கள் முன்னர் கோட்டம், தேவகுலம் என்ற பெயரினவாக இருந்தன (சிலம்பு—கனாத்திறம் உரைத்த காதை).