பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

39


போட்டியில் பங்கு பெறத் தவறுகிற பொழுது

கீழ்க்கண்டவாறு செயல்படுகிற எந்த வீரர் அல்லது விராங்கனையும், மேற்கொண்டு தொடர்ந்து போட்டிகளில் பங்குபெற, அனுமதி மறுக்கப்படுவார்கள்.

(அ) ஒரு வீரர் அல்லது வீராங்கனைக்கு ஒரு போட்டியில் இறுதியாகப் போட்டியிட அனுமதி அளித்த பிறகு அந்தப், போட்டியில் அவர் / அவள் எந்த விதமான தகுந்த காரணமும் அளிக்காமல் கலந்து கொள்ளாமல் விட்டு விட்டால், அவருடைய பெயர் போட்டிப் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதற்கும் உரிய நேரமில்லாமல் போவதால்.

ஆ) ஏற்கனவே முதற் கட்டத் தேர்வோட்டப் போட்டிகளில் (Heats) கலந்து கொண்டு, மேலும் கால் இறுதி, இறுதிப் போட்டிகளில் பங்குபெற வாய்ப்பு கிடைத்த பிறகு, அந்தப் போட்டிகளில் தகுந்த காரணம் எதுவும் இன்றி கலந்து கொள்ளத் தவறி விடுகிற பொழுது அவர் அவள் வேறு எந்தப் போட்டியிலும் மேலும் தோடரோட்டப் போட்டியில் கூட கலந்துகொள்ள முடியாதவாறு நீக்கப்படுவதற்கு அகில உலக விதிமுறைகள் பரிந்துரை செய்திருக்கின்றன.

குறிப்பு : ஓடவிடுபவருக்கு (Starter) இறுதிப் பட்டியலும் ஓடவிடும் நேரமும் தருவது கூட, ஏற்கனவே அறிவிக்கப்படல் வேண்டும்.