பக்கம்:அங்கும் இங்கும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
15. கலையின் விளக்கம்

கிடைத்தவர்கள் அத்தனை பேரையும் கொண்டு, எழுத்தறிவிப்பு இயக்கத்தைச் சட்டென்று நாடு முழுவதும் தொடங்கினார்கள். அப்போது அவர்கள் அரசியல் பொருளாதார நிலை எப்படி என்று கேட்டோம். எழுத்தறிவிப்பு இயக்கத்தைத் தொடங்கியபோது அரசியல் அமளி அடங்க வில்லை உள்நாட்டுக் குழப்பம் ஒரு பக்கம் வெளி நாடு களின் எதிர்ப்பு ஒரு பக்கம். பொருளாதார நிலையும் மோசம். இத்தனை இடையூறுகளுக்கு இடையிலேதான் அறிவுப் பேரியக்கம் வளர்ந்தது.

அலை ஒய்ந்து, தலை முழுகுவதென்றால் அது எப்போது முடியுமோ ? இடையூறுகளெல்லாம் நீங்கி, பொருள் குவிந்த பிறகே, பொது மக்களுக்குக் கல்வி என்றால் அது என்றைக்கு நடக்கும்?

சோவியத் ஆட்சித் தலைவர், தோழர் காலினின் அவர் களையே தலைவராகக் கொண்ட, எழுத்தறியாமை ஒழிப்புக் கழகத்தை அமைத்தனர். அக்கழகத்தில் ஐம்பது இலட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தனர். ஆகவே ஐம்பதினாயிரம் கிளை கள் தோன்றின. ‘அறியாமை அழிக’ என்ற முழக்கத்தை நாடு முழுவதும், ஊர்தோறும், வீடுதோறும் கலையின் விளக்கம் கண்டனர். எப்படி ?