பக்கம்:அங்கும் இங்கும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102


அந்த வேண்டுகோளை என் மனைவியைக் கைகாட்டி விட்டேன். “இந்தியாவைப்பற்றி நீங்கள் வினாக்களைக் கேளுங்கள். என் மனேவி பதில் சொல்லுவார்” என்று பொறுப்பை வேறு பக்கம் திருப்பி விட்டேன்.

மாணவிகள் பலர், ஒருவர் பின் ஒருவராகப் பல வினாக்களை எழுப்பினர். அத்தனைக்கும் பதில் கிடைத்தது. வினாக்களில் ஒன்றுகூட நம் நாட்டுப் பெரியவர்களைப் பற்றி இல்லை கேட்டது அனைத்தும் குழந்தைகளைப் பற்றியும் பள்ளிக்கூடம் பற்றியும் சிறுவர் சிறுமியர் வாழ்க்கையைச் சுற்றியுமே இருந்தன. இதோ சில எடுத்துக்கட்டு :

குழந்தைகளுக்குப் பிறந்தநாள் கொண்டாடுவீர்களா ? அப்போது என்னென்ன செய்வீர்கள் ?”

“நர்சரி பள்ளி நிறைய உண்டா ?"

“எந்த வயதில் தொடக்கப் பள்ளியில் சேர்ப்பீர்கள் ? ”

“வாரத்திற்கு எத்தனை நாள் பள்ளிக்கூடம் ?”

“நாளைக்கு எத்தனை மணி நேரம் பள்ளிக்கூடம் ?”

இவ்வகையில் சிறுவர் சிறுமியரைப் பற்றியே கேள்விகள் ஓடின.

“உங்கள் மாணவ மாணவிகள் எதில் எழுதுவார்கள் ?” இப்படியொரு கேள்வியைக் கேட்டு வைத்தாள், ஒரு மாணவி.

“தொடகத்தில் சில ஆண்டுகள் பலகையிலும் பின்னர் நோட்டிலும் எழுதுவார்கள்” - இது பதில்,

“ஏன் முதலிலேயே நோட்டில் எழுதி படிக்கக் கூடாது?” இக் கேள்வியை வேறு ஒருத்தி வீசினாள்.

“பலகையென்றால், ஒரு முறை எழுதி முடித்ததும், அதை அழித்துவிட்டு வேறொரு பாடத்தை எழுதிப் பழக