பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

சாஸனங்கள்

108

தக்கது' எனப் போதிக்க வேண்டும்.

A. இது நான் செய்யத் தக்கது; ஏனென்றால், இவ்வுலக விஷயமான சடங்குகளின் பிரயோஜனம் சம்சயமானது; அவற்றால் நினைத்த காரியம் கைகூடினும் கூடலாம் பயனின்றியும் போகலாம். எப்படியாயினும் அவை இவ்வுலகத்திற்குரியனவே. ஆனால், தர்மம் என்ற சடங்கோ அழிவுள்ளதன்று; அது இம்மையில் நினைத்த காரியங்களைக் கைகூடச் செய்யாவிடினும் பரலோகத்தில் அனந்தமான புண்ணியத்தை நிச்சயம் விளைவிக்கும். இகலோக உத்தேசங்களும் கைகூடுமாயின் தர்மம் என்ற சடங்குக்கு இரட்டைப் பங்கு லாபம் உண்டு. இம்மையில் காரிய சித்தியும் மறுமையில் எல்லையில்லாப் புண்ணியமும் தர்மச் சடங்கின் பயனாகின்றன.

B. ஈகை மிகவும் மேன்மை யென்று சொல்லப்படுகின்றது. தர்மத்தை தானஞ்செய்வதையும் தர்மத்தை அனுக்கிரகஞ் செய்வதையும் விடச் சிறந்த தானமும் அனுக்கிரகமும் கிடையா ; அதனால் சினேகிதனுக்கும் அன்பனுக்கும் உறவினனுக்கும் உபகாரிக்கும் இதுவே செய்யத்தக்கது; இதுவே மேன்மை; இதுவே சுவர்க்கத்தை அளிக்கக் கூடியது என்று சொல்ல வேண்டும்; சுவர்க்கம் அடைய முயல்வதைக் காட்டிலும் உயர்ந்த கருமம் என்ன இருக் கின்றது?