பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

சாஸனங்கள்

10 உண்மையான புகழ்.

தேவர்களுக்குப் பிரியனான பியதஸி அரசன் புகழிலும் கீர்த்தியிலும் அதிகப் பிரயோஜனமுள்ளதாக நினைக்கவில்லையெனினும் என்னுடைய ஜனங்கள் நெடுங்காலமளவும் தர்மத்தைக் கற்பித்தும் கேட்டும் தர்மத்தை வழிபட்டும் வாழ்ந்துவரத் தூண்டும் புகழையும் கீர்த்தியையும் விரும்புகின்றான். இவ்வொன்றிற்காகவே தேவர் பிரியன் பியதஸி அரசன் புகழையும் கீர்த்தியையும் வேண்டுகின்றான். தேவர் பிரியன் பியதஸி அரசன் எடுத்துக்கொள்ளும் பெருமுயற்சிகள் யாவும் மறுமைக்காகவே. ஏன்? எல்லோரும் பயத்திலிருந்து விடுபட வேண்டும்.1 அச்சமுடைமை புண்ணியத்திற்கு விரோதமானது.2 பெரியோருக்காயினும் சரி சிறியோருக்காயினும் சரி, நீடித்த முயற்சியாலும் யாவற்றையும் துறப்பதாலுமே 3 இது கிடைக்கின்றது. பிரத்தியேகமாகப் பெரியோருக்கு இது மிக அரிதாம்.

8 வாக்கியங்கள்.

1. ஸகலே அப பரிஸ்ரவே அஸ : யாவரும் அல்பமான பயமுடையவராதல் வேண்டும். அப-அல்ப.

2. ஏஸ து பரிஸ்ரவே ய அபுண்ணம். அச்ச முடைத்தல் தீங்கென்று கருத்துபோலும்.

3. ஸவம் பரிசஜித்ப. ஸர்கம் பரித்யஜ்ய. வடமொழி.