பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

சாஸனங்கள்

என்ற பெயர்போன புலவன் இவனால் ஆதரிக்கப் பெற்றவன், அக்காலத்தில், செங்கடற் கரையோரத்தில் பல துறைமுகங்கள் ஏற்பட்டன. மகன் என்ற பெயர் ஆங்கிலத்தில் மகாஸ் என வழங்கும். அவன் எகிப்துக்கு மேற்குள்ள கைரினே தேசத்து அரசன்; தாய் வழியில் துலமாயன் சகோதரமுறையினன். காலம் கி.-மு.285-258. அலகஸுதரன், அலெக்ஸாந்தர் ; கிரீக் தேசத்து எப்பைரஸ் என்ற நாட்டின் அரசன். இவன் அந்தியோக்கனுக்குப் பகைவன், அந்தியோக்கனைப்பற்றி இரண்டாம் சாசனக் குறிப்பிற் காண்க. அந்தேகினன் அந்திகோனாஸ். காலம் 277-238 ; இவன் மாஸிடோணியா தேசத்து அரசன்.

2. யவனர், காம்போஜர். இவர் எங்கிருந்தவ ரென்பதையும் எப்பாகத்தில் வசித்து வந்தன ரென்பதையும் படத்திற் கண்டு கொள்க. சிலரைப்பற்றி நமக்கு ஒருவித தெளிவும் உண்டாகவில்லை. உ-ம். ‘நாலுக தேசத்து நாலுபம்தியர்.’

“யவனர் நாடொன்று தவிர்த்து மற்ற நாடுகளுள் பிராமணர் சமணர் இல்லாத நாடே யில்லை” இந்த வாக்கியம் மான்ஸராவிலும், கால்ஸியிலும் ! 3-ம் வாக்கியத்தின் பின், அதாவது இரண்டாவது பாராவின் இறுதியில் வருகின்றது. யவனர் நாட்டில் அப்போது பிராமணர் சமணர் வசிக்கவில்லை என்ற சரித்திர உண்மை இதிலிருந்து கிடைக்கின்றது.