பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

அசோகனுடைய சாஸனங்கள்

I. உப சாஸனங்கள். 2
இவை அரசன் பௌத்தமதத்தில் சேர்ந்ததன்
பின் முதலில் பிரசுரம் செய்யப்பட்டவை.
அகப்பட்டுள்ள அசோகக் கல்வெட்டுக்
களுள் இவையே முந்தியவை போலும்.
II. பாப்ரு சாஸனம். 1
பௌத்த ஸங்கத்திலுள்ள தலைவருக்கு அசோகன்
எழுதிய கடிதம். பாப்ருவில் அகப்பட்டிருப்பதால்
பாப்ரு சாஸனம் என்று இதற்கு ஸ்ரீ வின்ஸென்ட்
ஸ்மித் பெயர் வழங்குகின்றார்.
III. பதினான்கு முக்கிய சாஸனங்கள். 14
இவை அசோகன் தர்மத்தையும் அவனுடைய
நோக்கங்களையும் விவரிக்கின்றன.
IV. கலிங்க சாஸனங்கள். 2
புதிதாகப் பிடிக்கப்பட்ட கலிங்க தேசத்து
ஜனங்களுக்கும் அதன் பக்கத்திலுள்ள
காட்டு ஜாதியாருக்கும் அபய தானம்
செய்யும் சாஸனங்கள்.
V. ஸ்தம்ப சாஸனங்கள். 7
அரசனது அரசாட்சியின் தன்மையைப் பற்றி
யும் கொள்கைகளைப் பற்றியும் கடைசி
முறையாக பிரசுரம் செய்யப்பட்டவை.
VI. ஸார்காத் சாஸனம். 1
பௌத்த ஸங்கத்தை உட்பகைகளிலிருந்து
காப்பாற்றுவதற்கு இடப்பட்ட கட்டளை.
ஸாஞ்சி ஸ்தம்பத்திலும் பிரயாகை ஸ்தம்
பத்திலும் இச்சாஸனத்தின் சில வாக்கியங்
கள் எழுதப்பட்டிருக்கின்றன.