பக்கம்:அஞ்சலி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14 லா. ச. ராமாமிருதம்


“அவள் உடம்பைக் கரையிலே எடுத்துப் போடறத்துக்குக்கூட எல்லாருக்கும் பயம்.

“கரையோரத்திலே, போலீஸ் வரவரைக்கும் அவள் ஜலத்திலேயே கிடந்தாள். சின்ன அலை மெள்ள மெள்ள அவள் முகத்தில் மோதி மோதிக் கழுவுகையில், “ஆப்படி யெல்லாம் சத்தியம் பண்ணிண்டோமே, இவள் கதி எப்படி ஆயிடுத்து பார்த்தையா!” என்று மனசிலே நினைக்காமல் இருக்க முடியல்லே.”—அவள் குரல் தழு தழுத்தது.

“அவள் கதி அப்படி! உன் கதி”

அவள் சோகத்திலிருந்து பேச்சை அவன் திருப்ப முயன்றான்.

“என் கதி? நீங்கள் வந்தேள்! மாமா ஜாதகங்கள் தேடாத இடமெல்லாம் தேடிச் சலித்துப் போனப்புறம், ‘ஏன்டா என் கஷ்டம் போறாதுன்னு என் தங்கை என் தலையில் ஒரு கல்லைச் சுமத்திவிட்டுப் போனாள் என்று எரிச்சல் பட ஆரம்பிச்ச சமயத்தில் நீங்கள் என் வாழ்க்கையுள் ஒரு புதுப்ரவாகம் மாதிரி வந்தேள்’ ‘அடியே, பக்கத்தாத்து மாதுர்பூதமய்யர் ஆத்துலே புதுசா ஒரு பையன் தங்க வந்திருக்கானே, அவன் ஜாதகமும் வேண்டாம் மண்னும் வேண்டாம், எனக்கு எதிலும் நம்பிக்கை கிடையாது, மனப் பொருத்தம் இருந்தால் போரும் என்று சொல்றாண்டி’ என்று மாமா என் மாமியிடம் பேசிக் கொள்கையில் இப்படியும் கூட இருக்காளா என்ன என்று நான் நினைச்சுண்டு, நேரே காவேரியம்மன் கிட்டே நடு வெய்யிலே ஓடிவந்து கேட்டதுண்டு அப்புறம் நீங்களும் என்னைப் பார்க்கவும் வந்தேள். ஆனால் கன்னிடத்தில் என்ன கண்டேள்?”

அவள் விரல்கள் அவன் மூழங்கையைத் தொட்டன.

சிறிய இருளில் அவன் பற்கள் பளீரென்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/24&oldid=1033386" இலிருந்து மீள்விக்கப்பட்டது