பக்கம்:அடியுங்கள் சாவுமணி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
9


புதுப்பெண்ணின் மகிழ்வு மின்னிச் சிவந்த கன்னங்கள் போல் ஒளிச்சிரிப்பு காட்டுகின்ற பாலிஷ் அழியாத பிளஷரில், தலை தெறிக்கும் வேகத்திலே ஒடுகிறானே முதலாளி மகன் முதலாளி -

அவனது டம்ப வாழ்வு வரும் போன்ற எண்ணற்ற உழைப்பாளிகளைப் பிழிந்தெடுத்த சாறு. அதைச் சொல்லும் அவனது ஆடம்பரப்பொருள் எல்லாம். ஆனால் அவன் அதை ஏற்க மாட்டான்.

கோடை வெயிலைப் பொறாது குளிர்மலை முகடு தேடி ஓடுகின்ற சுகவாசி.சோம்பல் வாழ்விலே அலுப்புற்ற காரணத்தால் இன்பம் நாடி யாத்திரா மார்க்கத்திலே கிளம்பி விட்ட உல்லாசி .. கட்டிய மனைவியின் காமசுகம் கசப்புற்றதால் கட்டிளம் பெண்களைத் தேடியலைகின்ற ரசிகசிகாமணி

எல்லோரும் உழைப்போரின் இரத்தத்தை. தசையை, உடலே, உயிரை அஸ்திவாரமாக்கி உயர்ந்த உத்தமர்கள்' இவர்கள் ஆடம்பர வாழ்வு வாழும் போது, இவர்களது டம்ப வாழ்வுக்கு வகை செய்வதற்கு இல்லாதவர்கள் உழைத்துச் சாக வேண்டும் என்பது விதியாம்!

அப்படிச் சொல்லும் கசடன் எவனேயாயினும் சரி, அவனுக்குக் கசையடி கொடுக்க வேண்டும் என்று குமுறுகிறது கொதிப்புற்ற எனது உள்ளம்.

விதி என்றும் கடவுள் என்றும் பசப்பி, மக்களை குருடர்களாக்கி, தங்களுக்கு - தங்களது நலத்துக்கு-லாபத்துக்கு பயன்படுத்திக்கொள்கின்ற கும்பல்.