பக்கம்:அடியுங்கள் சாவுமணி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4

வாழ்க்கையில் அல்லல் உறுவோரின் கதைகளை அறியும் போது துயரம் ஏற்படுகிறது. கோபம் பொங்குகிறது. சில சமயங்களில் மனித சமுதாயத்தின் மீது வெறுப்பு - இதயத்தின் அடித்தலத்திலேயிருந்து பொங்கி வரும் கசப்பு - உண்டாகிறது. மனிதரை மனிதராக வாழவிடாத இன்றைய சமுதாயமுறை ஒழியட்டும்; அழியட்டும்; மண்ணோடு' மண்ணாகட்டும்; நாசமாகட்டும் என்று சீறிச் சபிக்க வேண்டும் போல் உள்ளம் கொதிக்கிறது. ஆனால், நானும் செயலற்ற ஆயிரமாயிரம் தொழிலாளர்களிலே ஓர் தொழிலாளி என்ற நினைவு எழவும் இதயம் சாம்பிக்குவிகிறது.

இன்றையப் பொருளாதார சமூகத்திலே தொழிலாளிகள் கவலையால், சோகத்தால் நெட்டுயிர்த்து, அப்பெருமூச்சில் தங்களேயே கரைத்துக்கொள்வது தவிர வேறு போக்கு இல்லை. இன்று, காலத்தின் கொடுமையையும், மனிதரின் சுயநலச் செயல்களையும் மிருகத்தனங்களையும் எண்ணி எண்ணிக் கொதிப்புற்று, அவ் உள்ளத்தின் தீயிலே தங்களைக் கறுக்கிக்கொள்வது தவிர உழைப்பாளிக்கு வேறு வாழ்வில்லை.

வருங்காலத்தைப் பற்றி அவன் கனவுகள் கண்டு பயனில்லை. கனவு காண வேண்டிய அவசியமும் இல்லை. நிகழ்காலத்தின் சுமையே அவனை மண்ணோடு மண்ணாக்குவதற்காக மேலும் மேலும் அழுத்தித் தாழ்த்துகிறது. வாழ்வின் சகலவிதமான பிரச்சனைகளிலிருந்தும் விடுபடவே வழிதெரியாது திணறு