பக்கம்:அடியுங்கள் சாவுமணி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
26

சுட்டுக் கொல்லவேண்டும்' என்று கூவத் தோன்றுகிறது எனக்கு.

நாகரிகம், கலாசாரம் முதலிய மேற்போக்கான பேச்சுக்களை பொய்யெனச் சிரித்துச் சொல்லும் பிச்சை எடுக்கும் பண்பும், விபசாரமும் மனித சமுதாயத்தின் உண்மைத் தன்மையை அம்பலப்படுத்துகின்றன. பிச்சைக்காரர்களையும் விபசாரகர்களையும் ஒழிக்க முடியாது. ஒரு அளவுக்குள் கட்டுப்படுத்தலாம். சிருஷ்டி சக்தியின் உன்னதப் படைப்பு என்று பெருமை பேசுகிற மனித ஜந்துகளின் மானம் பறிபோகாமல் இருக்க வேண்டுமானல், இக்குறைகளை ஒடுக்கியாக வேண்டும் மனிதவர்க்கத்தின், அவசியத்தினாலும் உல்லாசத்திற்காகவும். முழுமனதுடன் ஈடுபட்டும். சக்தர்ப்பச் சூறைகளினல் ஆளாக்கப்பட்டும், செய்யப்பெறுகிற சிறுமைகளுக்கு எல்லாம் சாவுமணி அடித்தாக வேண்டும். -

மக்கள் நன்றாக வாழ எல்லோருக்கும் வசதிகள் செய்யப்பெற வேண்டும். நோய் வராது காக்க, மக்களைப் பழக்குவதுடன், வசிக்கும் சூழ்நிலைகள் புசிக்கும் உணவுகள் முதலிய அனைத்தையும் கவனித்து சுகாதார முறையுடன் அமைக்க வேண்டும் அமைத்துக்கொள்ளும் முறையில் மக்களின் அறிவு பல்க வேண்டும். நோய்கள் வந்தால், சமாளித்துக் கொள்ளவும் தேறவும், மீண்டும் சுகநிலை பெறவும் வைத்திய வசதிகள் முதல் எல்லாம் கிடைக்கும் நிலை பிறக்கவேண்டும். -

இன்று அவ்விதம் உள்ளதா? இல்லை.

மனிதனில் முக்கால் வாசிப் பேர்கள் தினசரிப் பிழைப்புக்கே தாளம் போடுகிறபோது, அன்றாட