பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பதிப்புரை

சங்கத் தமிழ்நூல்கள் என்ற சிறப்பினுக்கு உரிய பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்ற தொகை வரிசையுள் நடுவண் வைத்து மதிக்கப்பெறுவது எட்டுத்தொகை; அது, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறு நூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்னும் எட்டு நூல்களைக் கொண்டது. அவற்றுள் நான்காவதாகிய பதிற்றுப்பத்து, சேர, சோழ, பாண்டியர் என்ற தமிழ் நாடாண்ட மூவேந்தருள், முதற்கண் வைத்து மதிக்கத்தக்க சேரர் குலக் காவலர் பதின்மர் ஒவ்வொருவரையும், பத்துப்பத்துப் பாக்களால் தனித்தனியாக, பத்துப் புலவர்கள் பாடிய நூறு பாக்களைக் கொண்ட பெருநூலாகும்; அவற்றுள் இரண்டாம் பத்தும், பத்தாம் பத்தும் காணாமற் போகக், கிடைத்திருப்பன, எட்டுப் பத்துக்களே.

அவற்றுள் இரண்டாம்பத்தில், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக், குமட்டுர் கண்ணனாரும், மூன்றாம் பத்தில், பல்யானைச் செல்கெழு குட்டுவனைப், பாலைக் கெளதமனாரும், நான்காம் பத்தில், களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரலைக் காப்பியாற்றுக் காப்பியனாரும், ஐந்தாம் பத்தில், செங்குட்டுவனைப் பரணரும், ஆரும் பத்தில், ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைக், காக்கைப் பாடினியார் நச்செள்ளையாரும், ஏழாம் பத்தில், செல்வக்கடுங்கோ வாழியாதனைக் கபிலரும், எட்டாம் பத்தில், தகடுர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையை, அரிசில் கிழாரும், ஒன்பதாம் பத்தில், குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையைப், பெருங்குன்றுார்க் கிழாரும் பாடியுள்ளனர். கிடைத்துள்ள எட்டுப் பத்துக்களையும், பத்துப் பாட்டு விளக்கம் என்ற வரிசையில், ஒவ்வொரு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/4&oldid=1069137" இலிருந்து மீள்விக்கப்பட்டது