பக்கம்:அட்லாண்டிக் பெருங்கடல்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



6. அட்லாண்டிக் தந்தி

தந்தி முறையைக் கண்டறிந்தவர் மார்ஸ் என்னும் விஞ்ஞானி என்பதை நாம் நன்கறிவோம். அட்லாண்டிக் பெருங்கடல் வழியாகத் தந்திச் செய்தி அனுப்பலாம் என்னும் கருத்தை இவர் முதன் முதலில் 1843இல் கூறினார்.

முதல் அட்லாண்டிக் தந்தி 1858-இல் அயர்லாந்து, நியூபவுண்ட்லாந்து ஆகிய இரு நாடுகளுக்கிடையே இடப்பட்டது. அதே ஆண்டில் ஆகஸ்ட் 13 ஆம் நாள் புதிய உலகிற்கும் பழைய உலகிற்கும் இடையே முதல் தொலைவரைவுச் செய்தித் தொடர்பு ஏற்பட்டது. இது அவ்வளவு அமைதி தருவதாய் இல்லை. மற்றொரு கம்பி 1865-இல் கிடத்தப்பட்டது. இதுவும் முறிந்தது. இறுதியாகக் கம்பியைக் கிடத்து வதில் முதல் வெற்றி 1866-இல் கிட்டியது; வாணிப நோக்கில் சிறப்பு உண்டாயிற்று.

இதைத் தொடர்ந்து நான்காவது கம்பியைப் பிரிட்டன் 1873-இல் கிடத்தியது. 1879- இல் பிரான்சு ஒரு கம்பியைப் போட்டது. இதைப் பின்பற்றி ஜெர்மனி 1885 இல் கம்பி ஒன்றைப் போட்டது.

இதன் விளைவாகக் கம்பிகளைச் செய்வதிலும், இடுவதிலும் திருத்தங்கள் ஏற்படலாயின. கடல் வழித் தந்திப் பணியும் வளரலாயிற்று.

1871-இல் இரட்டை முறைத் தந்தி, செயல் நிலையில் நடைபெற்றது. இதில் இரு திசைகளிலும்