பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அ ணி ய று ப து

119



னுடைய எண்ணங்களை மொழிகளால் வெளியிடுகின்றான்.அந்த மொழிக்கு முதல் உறுப்பாய் நன்கு அமைந்துள்ளது இங்கு எழுத்து என வந்தது.

அ என்புது எழுத்து: ஆ என்பது சொல்.
ஆவின்பால் ஆன்ற அமுதாய் உயிர்களுக்குப்
பூவின்பால் ஊட்டும் புதுமையால் --- நாவின்பால்
போற்றி அதன்குலத்தைப் புத்தேள் இனத்தோடு சாற்றி வருமிவ் வுலகு.

இதில் பொருளும் யாப்பும் அணியும் அமைந்துள்ளன. உண்மை நிலைகளை நுண்மையாய் ஓர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். ஆழ்ந்து அறியும் அளவே அரிய பொருள்கள் எளிதே தெரிய வருகின்றன. கருதி வருவது கருத்தாய் விளைகிறது.

எழுத்துச் சொற்பொருள் யாப்பலங் காரம்என் றிசைத்த வழுத்து பஞ்சதி காரமும் மாசறுத்து அறியேன்; பழுத்த பாவலர் பாதபைங் கமலம்என் முடிமேல் அழுத்தும் அஞ்சலி ஆசறக் கற்றதே அறியேன்.

(குருகை)

ஐந்து வகை இலக்கணங்களின் அருமைகளையும் அவற்றை அறிந்து தெளிந்த புலவர்களின் மதிமைகளையும் இதனால் அறிந்து கொள்கின்றோம்.

கல்வியறிவைச் சால்புறப் பெறுதற்கு மூல சாதனமாயுள்ள இந்த ஐவகை இயல்களையும் கற்று மெய்யறிவு பெற்று உயிர்க்கு உய்தி பெற வேண்டும். அவ்வாறு பெறாமல் வைய மையல்களில் அழுந்திக் கல்விச் செருக்கோடு களித்துத் திரியின்