பக்கம்:அணியும் மணியும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

115

வறுமையில்வாடுவோர் குப்பையில் முளைக்கும் கீரையை உப்பில்லாமல் உண்ணும் காட்சியைக் காட்டுவதில் சிறுபாணாற்றுப் படைப்பாடலும் புறநானூற்றுப்பாடலும் ஒத்து இருப்பது அக்கால நிலையைக் காட்டுகின்றது எனலாம்.

இந்த வறுமைச் சித்திரங்களைத் தீட்டும் புறநானூற்றுப் பாடலுக்கும் சிறுபாணாற்றுப்படைப் பாடலுக்கும் மற்றோர் ஒற்றுமை நிலவுகிறது. புறநானூற்றுப்பாடல் பாலின்மையால் சுவைத்துச் சலித்துத் தாய் முகம் நோக்கி அழும் குழநீதையின் துன்பத்தைக் தண்டு தாயின் கண்களில் நீர் கலங்கும் காட்சியைக் காட்டுகிறது. சிறுபாணாற்றுப்படை அதைப் போன்ற துன்பக் காட்சியை நாயின் வாழ்க்கையில் வைத்துக் காட்டுகின்றது. நாய்க்குட்டி பிறந்து இன்னும் கண்களைத் திறக்கவில்லை; பசியால் தாயின் பாலைச் சுவைத்துப் பார்க்கின்றது. அதற்குப் பால் கிடைக்கவில்லை. அந்த வீட்டிலேயே உணவு இல்லை என்றால் நாய்க்கு எங்கிருந்து உணவு கிடைக்கும்? பசியால் மெலிந்து இருக்கும் அந்தப் புனிற்று நாய் என் செய்யும்? மடியிலோ பால் இல்லை, அதன் குட்டி படுத்தும் பாடு தொல்லையாக முடிகிறது. மடியைக் கவர்ந்து இழுத்துத் துன்புறுத்தும் அந் நோயை அதனால் பொறுக்கமுடியாமல் குரைக்கிறது. அத்தகைய நாய் குரைக்கும் அடுதல் மறந்த அட்டில் என்று அச் சமையலறையைக் குறிப்பிடுகின்றார்.

திறவாக் கண்ண சாய்செவிக் குருளை
கறவாப் பால்முலை கவர்தல் நோனாது
புனிற்றுநாய் குரைக்கும் புல்லென் அட்டில்

-சிறுபாண். 130-133

என்று அந்த அட்டில் வருணிக்கப்படுகிறல்து.

குழந்தையின் பசியைக் கண்டு வருந்தும் தாயும் குட்டியின் தொல்லையைப் பொறுக்க முடியாத நாயும் பசியின்