பக்கம்:அணியும் மணியும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

குறைந்த சொற்களால் நிறைந்த பயன் விளைவிப்பதே சிறந்த மொழிநடையின் சிறப்பாகும். நீண்ட சொற்றொடர்களுக்கே இருக்கும் ஆற்றலைவிடப் பழகிப் பண்பட்ட சிறிய சொற்றொடர்களுக்கே ஆற்றல் மிகுதியாகும் என்பதை எழுத்து மொழிக்கும் பேச்சு மொழிக்கும் உள்ள வேறுபாடு உணர்த்தும். பேசும் பொழுது சுருங்கிய தொடர்களால் சிறிய சொற்களைக் கொண்டு கருத்தை எளிதில் வெளிப்படுத்த இயல்கிறது. அவை உடனே செயலைத் தூண்டி ஆற்றல் மிக்கனவாக விளங்குகின்றன. எழுத்து மொழியாகிய இலக்கியநடை நீண்ட சொற்றொடர்களைக் கொண்டு உடனே செயலலைத் தூண்டாமல் மனிதனைச் சிந்தனையில் ஆழ்த்துகிறது. நீண்ட சொற்றொடர் களுக்கு இருக்கும் ஆற்றலைவிடச் சுருங்கிய சொற்களுக்கும். அவை அமையும் தொடர்களுக்குமே ஆற்றல் மிகுதியாக உள்ளது.

வள்ளுவர் வாய்மொழியும் பேச்சு மொழியின் மரபைப் பெற்றுக் குறைந்த சீர்களைக் கொண்ட குறட்பாவால் விளங்கி, ஆற்றல் மிக்கவையாக விளங்குகின்றது. ஏழு சீர்களைக் கொண்டு, இரண்டினும் குறைந்த அடிகளால் இயங்கிச் சுருங்கிய சொற்றொடர்களால் நிறைந்த கருத்தை உணர்த்திச் சிறந்த நடையாக அமைந்துள்ளது.

குறைந்த அடிகளால் விளங்கும் காரணத்தாலேயே இந்த நூலுக்குக் 'குறள்' எனப் பெயர் அமைந்து, சிறப்பு அடையாகிய 'திரு' என்பது சேர்ந்து 'திருக்குறள்' என்ற பெயர் நிலவியது என்பர். சிறு சொற்களால் ஆகிய சீர்களால் இயங்குவதும் இதன் சிறப்பியல்பு எனக் கூறத்தகும்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற – 34

என்ற குறளில், மனம், மாசு, நீர, அறன், பிற போன்ற சிறு சொற்களே மிகுதியாக அமைந்திருக்கக் காண்கிறோம். சிறு