இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
53
புகழேந்தியின் புகழுக்கு அவர் எடுத்துக்கொண்ட கதை மட்டும் காரணமன்று. கம்பர் தம் கற்பனைத்திறத்தால் இராம. கதையைச் சிறப்பித்ததைப் போலப் புகழேந்தியும் வடமொழிக் கதையைத் தமிழில் இனிய வெண்பாவால் இன்னோசைபட இயற்றி அணியும் கற்பனையும் சிறக்கக் காவியத்தை அமைத்துள்ளார் என்பது அறியக் கிடக்கிறது.