பக்கம்:அணியும் மணியும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75

விழையா உள்ளமோடு உதயகுமரன்பால் திரும்பித் தொடர்ந்து அறிவுரைகள் சொல்லத் தொடங்குகிறாள்.

உதயகுமரனோடு பேசிய மணிமேகலையைக் காயசண்டிகை எனத் தவறாக உணர்ந்த வித்தியாதரன், அவள் உதயகுமரனைக் காதலித்துவிட்டாள் எனவும், அதனால்தான் வித்தியாதர நகருக்குத் திரும்பாமல் அங்கேயே தங்கி விட்டாள் எனவும் நினைத்துப் புற்றில் அடங்கும் அரவைப்போல அவ்வம்பலத்துள் புகுந்து அவளின் நடத்தையை உற்று அறிய ஒளித்திருக்கிறான். உதயகுமரனோ அன்று இரவு மணிமேகலையை எப்படியும் சந்தித்துத் தன் விருப்பைத் தெரிவிக்க எண்ணங் கொண்டவனாய், ‘வேழம் வேட்டெழும் வெம்புலி போல, ஆயிழை இருந்த அம்பலம் அணைந்து, நாகம் கிடந்த புற்றில் நுழைவதைப் போல அவ்வம்பலத்துள் புக, ஆங்கு முன்னிருந்த விஞ்சையன், “ஈங்கு இவன் வந்தனன் இவள்பால்” என்று கருதியவனாய், வெஞ்சினத்தோடு அவன் பின் சென்று அவன் மணித்தோள் துணிய வாள் கொண்டு வீசி வீழ்த்துகிறான்.

குடவயின் அமைந்த நெடுநிலை வாயிலின்கண் சம்பாபதிக் கோட்டத்தில் கிடந்த மதுமலர்க்குழலி மணிமேகலை மயங்கி எழுந்து, விஞ்சையன் செய்தியையும் உதயகுமரனுக்குற்ற அழிவையும் உணர்ந்தவளாகித் தன் சொந்த உருவில் அவன் முன்வந்து தோன்றி, அவனுடைய கேளாத செவிகளில் துன்ப வேதனையால் எழுந்த வேதனைக் குரலைக் காட்டுகிறாள்.

அறந்தரு சால்பும் மறந்தரு துன்பமும்
யானினக் குரைத்துநின் னிடர்வினை யொழிக்கக்
காயசண் டிகைவடி வானேன் காதல

—காதை 21, 20-23

என்று மிக உருக்கமாகச் சொல்லி,