பக்கம்:அணியும் மணியும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

வைவாள் விஞ்சையன் மயக்குறு வெகுளியின்
வெவ்வினை யுருப்ப விளிந்தனையோ

—காதை 21, 24-25

எனப் பலபடச் சொல்லி வெய்துயிர்த்துப் புலம்புகிறாள்.

வாழ்க்கையில் இறுதியாகச் சிறிது ஒட்டிக்கொண்டிருந்த உறவும் அறுந்துவிடுகிறது: வாழ்க்கையைப் பற்றற்ற உள்ளத்தோடு நோக்கும் அவளது தூய உள்ளத்தில் துன்பத்தின் பெற்றியை அளந்து பார்க்கும் இயல்பு தானே அமைந்து விடுகிறது. உற்றார் உறவினர் என்ற நிலையெல்லாம் கடந்து, உலகத்து உயிர்கள் எல்லாம் ஒன்று என்ற பரந்த உள்ளம் அவளை அடைகிறது.

உதயகுமரனை இழந்த துன்பத்தால், மனமழிந்து மயங்கிப் புலம்பிய அவன் தாயாகிய இராசமாதேவிக்கு ஆறுதல் கூறும் அறிவுரையில், உலகத்து உயிர்களோடு ஒன்றிய அவள் தூய உள்ளமும், உயிருக்கும் உடலுக்கும் உள்ள உறவை ஆராயும் மனவியல்பும் விளங்குகின்றன. “உதயகுமரன் உயிர் துறந்துவிட்டானே என்றா அழுகின்றாய்? அவன் உடலுக்காக அழுகின்றாயா? உயிருக்காக அழுகின்றாயா? உடற்கழுதனை யேல் உன் மகனை எடுத்துப் புறங்காட்டில் இட்டது யார்? நீங்கள்தாமே அவனை இடுகாட்டில் இட்டீர்கள்; உயிருக்கு அழுதால், உயிர் தம் வினையின் இயல்பால் எங்கே போகிறது என்று நம்மால் கூறமுடியாது. அவ்வுயிரிடம் அன்புசெலுத்தும் உள்ளம் இருந்தால் உலகத்து உயிர்கள் எல்லாம் ஒன்றாகலின், அவ்வுயிர்களிடம் அன்பு செலுத்தலாமே” என்று ஆறுதல் கூறுகிறாள்.

யாங்கிருந் தழுதனை இளங்கோன் தனக்குப்
பூங்கொடி நல்லாய் பொருந்தாது செய்தனை
உடற்கழு தனையோ உயிர்க்கழு தனையோ
உடற்கழு தனையேல் உன்மகன் தன்னை

எடுத்துப் புறங்காட் டிட்டனார் யாரே