பக்கம்:அணியும் மணியும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

இவ்வாறு கதையமைப்பில் தன் கொள்கையை நிலைநாட்டுவதோடன்றி, இடையிடையே வாய்க்கும் இடந்தோறும் தம் கொள்கைகளைப் புகுத்தி அவற்றிற்கு விளக்கந் தருவதைக் காண்கின்றோம். அங்கே கவிஞனின் கொள்கைகள் தலைசிறந்து வெளிப்பட்டு அவன் உள்ளப் பண்பையும் கொள்கைகளில் கொண்ட அசையாத நம்பிக்கையையும் காட்டுகின்றன. இதுவரையிலும் கதைச் சுவையில் திளைக்க வைக்கும் கவிஞன், தான் யார் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் பகுதி இங்கேதான் அமைகிறது.

ஆசிரியர் தாம் எடுத்துக்கொண்ட கதையினை முடிக்கும்பொழுது வீட்டு நெறியின் சிறப்பைக் கூற ‘முத்தியலம்பகம்’ என்ற தனிப் பகுதியை அமைத்துத் தம் கொள்கைக்கு விளக்கம் தருகின்றார். இதனோடு மட்டும் நில்லாமல், இடையிடையே தக்க சூழ்நிலையில் சிறந்த கொள்கைகளை எடுத்துக்கூறும் பண்பினை ஆங்காங்குக் காண்கிறோம். கதை நிகழ்ச்சிகளில் ஏற்ற இடத்துச் சிறந்த நீதிகளையும் சமணசமயத்துக் கருத்துகளையும் நிலைநாட்டு வதைக் காணலாம்.

வள்ளுவர், அன்பு அறம் அருள் முதலிய அறன்களை வற்புறுத்தும் அதே வாயால், உலகின் இயல்பை அறிந்து அன்பு அருள் பண்பு முதலியனவும் சிறக்க வேண்டுமானால் பொருள் வேண்டும் என்று வற்புறுத்தக் காண்கிறோம். பொருளல்ல வரையும் பொருளாகச் செய்யும் பொருள் இல்லையென்றால் அவரை யாரும் பொருட்படுத்தமாட்டார்கள் என்பது அவர் துணிபு ஆகும். பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது அவர் அறிவுறுத்தும் உண்மையாகும். மறுமையைப் பற்றியும் இம்மை அறங்களைப் பற்றியும் வற்புறுத்தும் திருத்தக்கத் தேவரும் வள்ளுவரைப் போலவே பொருளின் பெருமையை வற்புறுத்தி அதனை ஈட்டவேண்டிய இன்றியமையாமையைக் காட்டக் காண்கிறோம்.