பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எதிர்காலத்தில் அணுவாற்றல்

295


என்று மணிவாசகப் பெருமான் பாடிய மூலபண்டாரம் வைத்து மூடிய பெட்டி இதுதான். இந்தப் பெட்டியில் நிறைந்துள்ள ஆற்றல் நம்முடைய இருப்பிற்கே வேண்டப் பெறுவது. இந்த ஆற்றல் நம்மைச் சுற்றி எம்மருங்கும் சூழ்ந்துதான் இருக்கின்றது; நினைக்க முடியாத அளவிலும் பரவிக் கிடக்கின்றது. ஆனால், அந்த ஆற்றல் பூட்டப் பெற்றுக் கிடக்கின்றது. அந்தப் பூட்டை இன்றைய அறிவியலறிஞர்கள் ஓரளவு திறந்துவிட்டார்கள். அணு வெட்ட வெளியாய்-வெறுந் துளேயாய்-பெருமாயையாகப் போனலும் அந்த மாயைக்குள் மாயனேயும் கண்டே தீருவோம் என்று அறிவியலறிஞர்கள் விடாது முயன்று வருகின்றனர்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப ; எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்."

என்ற வாய்மொழிக் கேற்ப, அவர்கள் அணுவின் இரகசியத்தையெல்லாம் ஒருநாள் அறிந்தே தீர்வார்கள். அந்த மந்திர ஆற்றலால் மன்பதை உய்யப் போகின்றது; மாந்தர்களின் வாழ்க்கைத் தரம் பல்வேறு முறைகளில் உயரத்தான் போகின்றது. அந்த நாளே எண்ணி இளைஞர் உலகம் அறிவியலே ஆழ்ந்து பயின்று ஆராய்ச்சிப் பாதையில் செல்ல முனைய வேண்டும்.


  • குறள் - 666.