இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கற்குரு தேவர் திருவடிக் கன்பன் ;
காடுவாழ் வுறச்சிறை புக்கோன் ;
பற்பமென் மலர்வாழ் கலைமகள் தனக்கே
பண்புயர் பொருளெலாம் அளித்தோன் ;
கற்பனைக் குயில்வாழ் தமிழ்ப்பொழில் நடுவண்
கலைக்களஞ் சியம்அமைத் திட்டோன் ;
அற்புதன் ; எங்கள் நல் அவினாசி
ஆண்டகைக் குரியதிந் நூலே.