பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

அண்ணல் அநுமன்

இந்நூலாசிரியரைப்பற்றி.....

பிறப்பு: 27-8-1916

87 அகவையைத் தாண்டிய இந்த நூலாசிரியர் எம்.ஏ., பி.எஸ்சி., எல்.டி., வித்துவான், பிஎச்.டி பட்டங்கள் பெற்றவர்.

ஒன்பதாண்டுகள் துறையூர் உயர்நிலைப்பள்ளி நிறுவனர்-தலைமை ஆசிரியராகவும் (1941-50), பத்து ஆண்டுகள் காரைக்குடி அழகப்பா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் - துறைத்தலைவராகவும் (1950 - 60), பதினேழு ஆண்டுகள் திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை நிறுவனர் - பேராசிரியராகவும் (1960-77) பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

1978, சனவரி, சென்னையில் குடியேறிப் பதினைந்து மாதங்கள் (1978 பிப்ரவரி - ஜூன் 1979) தமிழ்க் கலைக் களஞ்சியத்தின் முதன்மைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றியவர். திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறையில் 1986ஆம் ஆண்டு மூன்று மாதங்கள் மதிப்பியல் பேராசிரியராகவும், 1989 மே முதல் 1990 அக்டோபர் முடிய 18 திங்கள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகக் காஞ்சித் தத்துவ மையத்தில் தகைஞராகவும் பணியாற்றி 1200 பக்கத்தில் ’வைணவச் செல்வம்’ என்ற ஒரு பெரிய ஆய்வு நூலை உருவாக்கி வழங்கியவர். முதற்பகுதி 1995 இல் 575 பக்கத்தில் வெளி வந்துள்ளது. இரண்டாவது பகுதி அச்சேறும் நிலையில் உள்ளது. (த.ப.க. வெளியீடு). 1990, ஆகஸ்டு 20 முதல் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/163&oldid=1361366" இலிருந்து மீள்விக்கப்பட்டது