15 அற்புத மனிதர்
செட்டிநாட்டரசர் ராஜா சர். அண்ணாமலைச் செட்டியாரின் புகழையும்; கொடையுள்ளத்தையும் வானளாவ உயர்த்தி ஒளிவீசச் செய்துள்ளது.
வெள்ளையர் ஆண்ட இந்தியாவில் ஆங்கில மோகம் தலைதுாக்கி நின்ற காலத்தில்-
அண்ணாமலைச் செட்டியார் என்னும் அற்புத மனிதர் உள்ளத்தில் தமிழ்த்தாய் குடிகொண்டு - ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழைக்’ காணவேண்டுமென்று முழங்கிக் கொண்டிருந்தார்.
தாயின் விருப்பத்தை நிறைவேற்றும் தமிழ் மகனாக - அண்ணாமலைச் செட்டியார் அதற்கான அற்புதப் பணிகளைச் செய்து முடித்தார்.
- தெருவெல்லாம் தமிழ் இசை முழங்க - அதற்கென்று ஒரு தனித் தமிழ் இசை மன்றமும்,
- எட்டாக் கனியாக இருந்த கல்விக்கனி - எவர்க்கும் எளிதில் கிட்டும் வண்ணம் - கல்விச் சாலைகளையும்; பார்ப்புகழும் பல்கலைக் கழகமும் படைத்து; தன் உள்ளத்துத் தமிழ்த் தாகத்தைத் தணித்துக் கொண்டவர் ராஜ சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்கள்.
உலகில் சிலரிடம் ஒன்றிருந்தால் ஒன்றிருப்பதில்லை. வற்றாத செல்வமும்; குன்றாத கொடை உள்ளமும் படைத்தவர்கள் உலகில் மிகச் சிலரே!
அவர்களில் முதன்மையாய்த் திகழ்ந்து முத்திரை பதித்துச் சென்றவர் ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் என்றால், அது மிகையாகாது.