பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23 அற்புத மனிதர்



துரத்து உறவினரான எஸ்.ஏ.ஏ. அண்ணாமலை செட்டியார் என்னும் பெயர் கொண்ட வாலிபன் அங்கு வந்து சேர்ந்தான்.

விளையாட்டுத் துறையில் மிகுந்த ஈடுபாடுடைய அவர், அண்ணாமலைச் செட்டியாரை மைதானத்திற்கு அழைத்துச் சென்று, ஹாக்கி, டென்னிஸ், கால்பந்து போன்ற பலதுறை விளையாட்டுக்களில் நல்ல பயிற்சியை ஏற்படுத்தி திறமைசாலி ஆக்கினார்.

இவர்கள் விளையாடுவதைப் பார்த்து, அண்டை அயலில் உள்ள செட்டிமார் விட்டுப் பிள்ளைகளும் வந்து கலந்து கொள்ளவே -

பகலில் கல்விநேரம் போக மாலையில் விளையாட்டில் ஆர்வம் மிகுந்து பொழுது இன்பமாகக் கழிந்தது. அதுமட்டுமல்லாமல், அந்த வயதில் வலுவான உடல் ஆரோக்கியத்தையும் அண்ணாமலை பெற்றான்.

கல்வி பயிலும் போதே - தந்தைக்கு உதவியாக தொழிலிலும், அறப் பணிகளிலும் அண்ணாமலைச் செட்டியார் ஈடுபட்டு வந்தார்.

கல்வியை ஓரளவோடு நிறுத்திக் கொண்டு, இளம் வயதிலேயே தொழில் புரிந்து பணம் சேர்க்கும் ஆர்வமே அண்ணாமலை செட்டியாரின் மனதில் மேலோங்கி நின்றது. அதற்கேற்ற திறமையை அவர் அப்போதே வளர்த்துக் கொண்டிருந்தார்.

இந்த சமயத்தில் பெற்றோர்கள் - அவருக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று விரும்பி, அதற்கான காரியங்களில் ஈடுபட்டு வந்தனர்.