பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31 அற்புத மனிதர்



அண்ணாமலை எங்கு சென்றாலும் திருக்குறளை எடுத்துச் செல்ல தவறமாட்டார்.

பிறரிடம் பேசும் போது, சில குறள்களை, தக்க சமயத்தில் பயன்படுத்தி மேற்கோள் காட்டிப் பேசுவார்.

சுயமாக முயற்சி செய்தும்; தானே பல நூல்களைப் வாங்கிப் படித்தும்; ஆங்கிலத்தில் மிகத் தெளிவாகவும், வரையறுத்தும் கூறும் ஆற்றலை வளர்த்துக் கொண்டவர்.

அறிவாற்றலிலும், பரம்பரை வாணிகத் தொழிலிலும் தன் மகன் வேகமாக வளர்ந்து வருவதை கண்ணாரக் கண்டபோது உள்ளபடியே உள்ளம் பூரித்துப் போவார்.


திருச்சிராப்பள்ளி நகரமன்றவரவேற்பு -பெரியார்திரு.ஈ. வெ. இராமசாமி நாயக்கர் அவர்கள் அரசர்அவர்களுக்குப் பொன்னாடை போர்த்துதல்