பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51 அற்புத மனிதர்



11. எனது பணியும் என்
ஆசைகளும்


நான் யார்? என் விருப்பம் என்ன?

என் பணி என்ன? கொள்கை என்ன? ஆகிய கேள்வி களுக்கு விடையளித்தாற் போல் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் 25.3.1944-ம் ஆண்டு, அனைவருக்குமான ஒரு பொதுக்குறிப்பு எழுதியிருந் தார்கள் அதில்

சிவமயம்

“ஸ்ரீ நடராஜப் பெருமானைத் தினந்தோறும் வணங்குவேன். அண்ணாமலை சர்வகலாசாலையின் வளர்ச்சியை ஒவ்வொருநாளும் சிந்திப்பேன். தமிழ் நாடெங்கும், தமிழிசை முழங்க வேண்டுமென்பது எனது ஆவல், ஈட்டலும், காத்தலும் வகுத்தலும் என் வாழ்க்கையின் கொள்கை.”

மு. அண்ணாமலைச் செட்டியார்