அண்ணாமலை என்னும் 72
18. அண்ணாமலை என்னும்
அற்புத மனிதர்
பலதரப்பட்ட குணாதிசயங்களைக் கொண்ட மனித சமூகத்துடன் பின்னிப் பிணைந்து வாழும்போது-
திறந்த புத்தகம் போல் வாழ்வதென்பது இயலாத ஒன்று;
உலகிலுள்ள தீய குணங்களில் ஏதேனும் ஒன்று நாம் விரும்பியோ, விரும்பாமலோ அல்லது அறியாமலும் கூட, நம் மனத்தின் ஏதோ ஒரு மூலையில் ஒட்டிக் கொண்டிருக்கலாம். எப்போதாவது வெளிப்படும் போதே அதனை அடையாளம் காண இயலும்.
தீயவற்றினின்று விடுபட வேண்டுமென்கிற எண்ணமே ஒருவித பயிற்சிதான்.
இத்தகைய பயிற்சியின் மூலம், பரிசுத்தமான மனத்தைப் பெறுவதுதான் உத்தமமான வாழ்க்கை.
பலதரப்பட்ட சோதனைகளுக்கு மத்தியிலும் ஒரு உத்தமமான வாழ்க்கைத் தன்னை ஆட்படுத்திக் கொண்டவர் ராஜா. சர். அண்ணாமலைச் செட்டியார். மேலேழுந்த வாரியாகப் பார்ப்பவர்களுக்கு அவரது ஆடம்பர வாழ்க்கை தெரியும், ஆழ்ந்து பார்ப்பவர்களுக்கு அவரது பற்றற்ற மனம் தெரியும்.