பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75 அற்புத மனிதர்



அவற்றை -
நாட்டு நலனுக்காவும்-
நல் அறத்திற்காகவும்-
கல்விக்காகவும்-
வாரிஇறைத்த வள்ளல் அவர்.


அவர் உருவாக்கிய பல்கலைக் கழகமும் அவரால் உருப்பெற்ற தமிழ் இசை மன்றமும், எண்ணற்ற கல்விச் சாலைகளும், அளப்பரிய ஆலயத்திருப்பணிகளும், காலம் உள்ளளவும், கல்வெட்டுக்களாய் அவர் புகழ் பரப்பி நிற்கும்.

தமிழ் நாடு-
தமிழ் மொழி-
தமிழ் மக்கள்-

உள்ளவரை, ராஜா சர்.அண்ணாமலைச் செட்டியாரின் புகழ் மங்காமல் ஒளி வீசிக் கொண்டிருக்கும்!

ராஜா அண்ணாமலை மன்றம், சென்னை.