பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 




“டே! மண்டூ! சாட்டாச்சேன்னோ? சரி கொஞ்சம் உட்கார். நேக்குக் கொஞ்சம் கையை வலிக்கிறது. நான் சொல்லிண்டு வர்ரேன். சமர்த்தா எழுது, தெரியறதோ”

“ஆகட்டும் மாமா! லெடரோ?”

“எதா இருந்தா என்னடா நோக்கு? சொல்வதை எழுதேண்டா!”

“ஆஹா! இதோ லெடர் பேபர் எடுத்துண்டு வர்ரேன்”

“பார்க்கணும் உன் சாமர்த்தியத்தை. எந்த லெடர் பேப்பர் எடுத்துண்டு வர்ரே”

“ஏன், ‘ஜர்னலிஸ்டு’ லெடர் பேப்பர் தான்”

“மண்டூன்னா சரியா இருக்கு. இப்ப திவான்பகதூர் தீர்த்தகிரி முதலியாருக்கு லெடர் எழுதணும். அதற்கு இந்த லெடர் பேப்பர் ஆகாது, போய் ராகவாச்சாரியார், பிரசிடெண்ட், ராம பக்தஜன சபான்னு இருக்கே, அந்த லெடர் பேபர் எடுத்துண்டு வாடா”

“அனுமார் பிளாக் போட்டிருக்கே!”

5