பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

இன்று நடத்திடும் திருநாளின் மாண்பு, நாளையும் மறுநாளும்,பிறநாட்களிலும் நமது எண்ணத்திலும் செயலிலும் ஒளிவிட வேண்டும். அதற்கே இந்நாள்! அவர் புகழ் பாடி மகிழ்ந்திட மட்டுமல்ல- அவர் வழி நடந்திட, அவர் காண விரும்பியதைக் கண்டிட, அவர் தந்து சென்றதை உருக்குலைக்காதிருந்திட, அவர் ஊட்டிய உணர்ச்சிகளை உயிருள்ள வையாக்கிட!

மாலையின் மாண்பு, மணத்தில்! விளக்கின் பயன் ஒளியில் ! விழாக்களின் பலன் நமது செயலிலே இழைந்திடும் மாண்பிலே இருக்கிறது!

அவருடைய பிறந்த நாள் நாமெல்லாம் நற்கருத்தும் சீரிய செயலும் பெற்றிடுவதற்கான வாய்ப்பாக அமைதல் வேண்டும்.

அதற்கான முறையில் நாம் நடந்து கொள்கின்றோமா என்ற கேள்வியை எழுப்புகிறேன் — நம்முன் உள்ள மிகப் பெரிய கேள்வி அது.

மகான்களையும், மாவீரர்களையும் கொண்டாடுவதிலே வல்லவர்கள் நாம் என்றேன்; அவர்கள் புரிந்த அற்புதங்களை, மகிமைகளை, காதைகளாய், கவிதைகளாய் ஆக்கி மகிழ்வதிலும் நாம் மிகவும் வல்லவர்கள்.

அவர் கடலை அடக்கினார்: காற்றை விரட்டினார்; கரு நாகத்தை மாலையாக அணிந்தார் : கந்த மூலமே அவருக்கு உணவு! தொட்டார், பட்டமரம் துளிர்த்தது! பார்த்தார்! மலடி தாயானாள்! குருடன் பார்வை பெற்றான்—இப்படிப்பட்ட கதைகளைக் கேட்டுக் கேட்டுச் சொக்கிப் போகிறவர்கள் நிரம்பிய நாடு, நம் நாடு!

இந்த மகிமைகளையும் அற்புதங்களையும் வியந்து பேசுவது, பிறகு எதற்குப் பயன்படுகிறது ? அவர் மகான், ஆகவே அப்படிச் செய்தார். நாம் சாமான்யர்கள், நம்-