தொகுப்புரை
குன்றிலும் கடலிலும் சிப்பியின் வயிற்றிலும் பாறையின் இடத்திலும், இன்னும் எங்கெங்கோ காணப்படும் ஒன்பது வகை உயர்மணிகள் நவரத்தின மாலையாக மாறிவிடுகிறது.
தூய வெண்மை நிறம் - மரகதப் பச்சை நிறம்-செந்நிறம்- இளஞ் சிவப்பு நிறம்- இப்படி பல வண்ணங்களில் மலர்கின்ற பல்வகை மலர்கள் கதம்ப மாலையாக உருமாறி விடுகிறது.
அதுபோல, தமிழகத்து முதல்வர் — தமிழினத்தின் தலைவர் காக்கும் கரங்களினால் தமிழகத்தைக்காக்கத் தொடங்கிய பிறகு - மொழிந்த ‘திருவாசகம்’ நம்மையெல்லாம் - நம் உள்ளத்தை எல்லாம்- உலகை எல்லாம் உருக்கும் அருள்வாசகமாக விளங்குகிறது. அந்த வாசகங்களில் சிலவற்றை சொல்மாலையாக்கி - சொல்லாரம் என்ற தலைப்பில் தொகுத்திருக்கிறேன். சொல்லாரத்தின் மணம்- தமிழ் மக்களின் மனத்துக்கு மட்டுமல்ல, வாழ்வுக்கும் இனிமை பயக்கும்.
அறிவுக் கருவூலத்தை அவனிக்கு அளித்து அறிஞர் துதிக்கப்படவேண்டியவர்.
அவர்தம் கருத்துக்களை மாலையாக்கித் தருகின்ற அரும் பணியை என்னிடம் ஒப்படைத்த என் உயிர் நண்பர் கே.ஆர். நாராயணன் என்றும் என் நன்றிக்கு உரியவர்.