பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9


ஆனால் நம்மிடத்தில் நிரம்பத் தரப்பட்டு இருக்கிறது, எண்ணி— எண்ணி, எழுதி எழுதி — எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது. எதை ஏற்றுக்கொள்வது என்று புரியாமல் இன்று இருக்கிறோம்.

என்னைச் சந்தித்த சிலர் "உங்களையா அழைத்தார்கள், காந்தியாரைப்பற்றிப் பேச" என்று கேட்டார்கள்.

காந்தியாரால் லாபம் அடையாதவர்களில் நான் ஒருவன் காந்தியாருடைய கொள்கைக்கு விரோதி என்றுகூட சிலரால் கருதப்பட்டவன். அதனால் கிடைத்திருக்கக் கூடிய லாபங்களைக்கூட இழந்தவன் என்பதை நண்பர்கள் அறிவார்கள். என்னைவிட அவர் பெருமைபற்றிச்சொல்ல வேறு யாரும் இருக்க முடியாது. மகாலிங்கம் சொல்லுகிறார் என்றால் காந்தியாருடைய பெருமையால் அரசியலில் ஏற்றம் பெற்றவர்.

இதைக் கூடச் செய்யாவிட்டால் வேறு என்ன பெருமை இருக்கிறது ? வள்ளலாருடைய எளிய தோற்றத்தில் எனக்குப் பற்று உண்டு. எளிய தமிழில் எதைஎதையோ சொல்ல நினைத்தார். யாருக்குச் சொல்ல நினைத்தார்? எளியவர்களுக்கு, ஏழைகளுக்குச் சொல்ல : நினைத்தார். அதனால் எளிய தமிழில் கூறினார்.

பூமியில் உள்ள தங்கம் அத்தனையும் நகை செய்ய முடியாது. தேவையான அளவு கொடுத்து நகை செய்யச் சொல்வதுபோல நம்மிடத்தில் ஏராளமான கருத்துக் குவியல் இருந்தாலும் தேவையானதைப் பயன்படுத்த முன்வர வேண்டும்.

காந்தியாரின் பொருட் காட்சியை நான் பார்வையிட்ட போது காந்தி கிராமத்தைச் சார்ந்த இராமச்சந்திரன் என்னைப் பார்த்து “நீங்கள் காந்தீய வழியில் நடக்கவேண்டும்” என்று கூறினார்.

நான் நெடுங்காலத்திற்கு முன்பே காந்தியத்தின் நல்ல கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவன்.