பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89


சேர்ந்து ஊக்குவிப்பார்கள். இதற்குத் துணை செய்யும் வகையில், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு வேளாண்மை மக்கள் மீது வரி எதுவும் விதிக்காது விடவேண்டும். ஏனெனில், கிராமப் புறங்களில் விவசாயிகள் கைகளில் காசு புழங்கத் துவங்கியுள்ளது. பணத்தின் ஒசை கேட்கத்துவங்கியுள்ளது.

இப்பொருட் காட்சியைத் தொடர்ந்து உலக வேளாண்மைப் பொருட்காட்சியை நடத்திட வேண்டும். தொழிலும் வேளாண்மையும் கைகோத்து முன்னேறச் செய்வோம். அதற்கு உலக வேளாண்மைப் பொருட்காட்சியை நடத்துவது உதவும். ஏனைய நாட்டவரெல்லாம் கையாண்ட முறைகளென்ன ? எப்படி முன்னேறி வேளாண்மைத் துறையில் வெற்றிகளை ஈட்டினார்கள் என்பதை யெல்லாம் நம்மவர்கள் உணர்ந்திடச் செய்வோம்.

இதேபோல நீண்ட கடற்கரையைக் கொண்டது இந்நாடு. டில்லியில் இருப்பவர்கள் ஆயிரம் மைல் பயணஞ் சென்றால்தான் முடியும். இங்கே அப்படியல்ல. எப்பக்கம் சென்றாலும், கடல் அலைகள் உங்கள் கால்களைக் கழுவும். இத்தகைய கடல் வளமுண்டு. எனவே, மீன்பிடிதொழிலும் வளர்ச்சியடைச் செய்யவேண்டும். அப்படிச் செய்தால், உலகில் பல நாடுகளுக்கு மீன் பதப்படுத்தி அனுப்பும் வாய்ப்பு நமக்குண்டு

F-42