பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24. யாழ் கங்கை


செல்வி "மல்லிகாவின் இந்த நடனத்தைக் காண வாய்ப்பு கிடைத்தது உள்ளபடியே எனக்கு மகிழ்ச்சி தருவது ஆகும். ஏற்கனவே ஒரு நாடகத்தை நடத்தி இருக்கின்றனர். இரண்டாவது முயற்சியாக யாழ் நங்கை என்னும் இந்த நாடகம் முதல்முறையாக இங்கு நடைபெறுகிறது.

அன்னைக் கலைக் குழுவினரைப்போல், சில கலைக் குழுவினர் சில ஆண்டுகளாக நாட்டிய நாடகங்களைத் தமிழகத்தின் கலையரங்குகள் தோறும் நடத்தி வருகின்றனர். நடனம் தனியாகவும் நாடகம் தனியாகவும் இருந்தன. இப்போது அது நடன நாடகமாகச் சேர்ந்து நடைபெறுகிறது.

நாடகத்தின் மூலம் மட்டுமே எடுத்துச் சொல்ல முடியாத கருத்துக்களை, நடனத்தின் மூலம் மட்டுமே எடுத்துச் சொல்ல முடியாத கருத்துக்களை நாட்டிய நாடகத்தின் மூலம் சேர்த்துச் சொல்கின்றனர்,

நடனம் ஆடுவது என்றாலே மிகச்சிரமம். அதற்கு ஆர்வமும் பயிற்சியும் உழைப்பும் தேவை. நாட்டிய நாடகத்தின் மூலம் நல்ல கருத்துக்களே எடுத்துச் சொல்வது மட்டுமல்லால், தமிழகத்தின் பண்டைய பெருமையையும், இன்றுள்ளவர்கள் மறந்துவிட்ட நமது முன்னோர்களின் கலைத்திறத்தையும் உலகுக்கு உணர்த்தும் வகையில் முயற்சி செய்ய வேண்டும்.

  • பன்மொழிப் புலவர் அப்பாதுரையார் அவர்கள் மக