பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98


பயன்படுத்த, இருக்கின்ற வசதிகளை விரிவுபடுத்தி விஞ்ஞானமுறையில் வளர்ச்சி காணவேண்டும் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர்.

உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் நம் நாட்டுச் செல்வத்தைப் பெருக்குவதற்கும் ஜகஜீவன் ராம் மேற்கொண்ட முயற்சிகள் மிகப்பல. தமிழக அரசு அவரை அணுகிய நேரத்திலெல்லாம், அவர் ஆதரவான வாக்குறுதிகளை அளித்தார்.

தமிழகத்தில் ஓரளவு உணவு உற்பத்தி பெருகி நிலைமையை நாம் சமாளிக்க முடிந்ததென்றால், உழவர்களின் உழைப்பும் அதிகாரிகளின் அக்கறையும், அமைச்சர் ஜகஜீவன்ராம் தந்த ஒத்துழைப்பும் காட்டிய ஆர்வமும் மிகமுக்கியமான காரணங்களாகும் என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

சென்ற ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் புதியமுறைகளை வேளாண்மைத் துறையில் புகுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டோம். அப்போது அவற்றைத் துவக்கிவைக்க, ஜகஜீவன்ராம் சென்ற ஆண்டு வந்தார். தஞ்சைத் தரணியில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். பச்சைப் பசேல் என்றிருக்கும் வயல்களையும் சூழ்ந்துள்ள தென்னஞ் சோலைகளையும் பார்த்தார். இவ்வளவு இருந்தும் பஞ்சம் இருக்கலாமா எனச்சிந்தித்தார்.

தகுந்த நேரத்தில் தகுந்த அளவு வசதி செய்திருந்தால், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக மட்டுமன்றி, இந்தியாவின் நெற்களஞ்சியமாகவும்